சென்னையில் தங்கம், வெள்ளி விலை இன்று மீண்டும் உயர்வு!
சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது.
விலை உயர்வு காரணமாக சென்னையில் இன்று ஒரு சவரன் ரூபாய் 37 ஆயிரத்து 808 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4,726 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகிறது.

சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை, 100 ரூபாய் உயர்ந்து, 71 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு பத்து காசு உயர்ந்து 71 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது.
கொரோனா நோய் பாதிப்பு காரணமாக தொழில்துறை தேக்கம் அடைந்துள்ளதால், உலகம் முழுக்க பாதுகாப்புக்காக தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் சமீப காலமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.
அதன் விலையில் ஏற்றம் மட்டுமல்லாது, விலையில் இறக்கமும் நிலவியது. நான்கு நாட்களுக்கு முன்பு, குறைந்த தங்கம் விலை, மூன்று நாட்களுக்கு முன்பு கூடியது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதனிடையே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று மாலை புதிய உச்சத்துடன் நிறைவடைந்த நிலையில் இன்று காலை மேலும் அதிகரித்து 47,026.02 என்ற அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டது.












Click it and Unblock the Notifications