Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகம் தப்பி ஓடிய ஸ்வப்னா? வழியில் 'நந்தினியிடம்' பேசியதாக பரபர தகவல்.. வெளியான சிசிடிவி காட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் செங்கோட்டை பகுதிக்கு ஸ்வப்னா காரில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    Gold Smuggling | Kerala அரசியலை ஆட்டம் காண வைத்த பெண்கள் |Swapna Suresh |Saritha Nair

    திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் வந்த நிலையில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய சரக்கு பிரிவில் ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்துஅந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியை திறந்து பார்த்தனர்.

    அப்போது அதில் 30 கிலோ தங்கம் இருந்ததும், அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி என்பதும் தெரியவந்தது. சுங்க இலாகா அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியபோது, தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரே‌‌ஷ் என்பவர் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

    வழக்கு மாற்றம்

    வழக்கு மாற்றம்

    இவர் கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் பணி புரிந்தவர் எனக் கூறி எதிர்க்கட்சிகள் பிரச்சினை கிளப்பின. எந்த விசாரணைக்கும் தயார் என்றார் பினராயி விஜயன். இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமை (NIA) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    சிசிடிவி காட்சிகள்

    சிசிடிவி காட்சிகள்

    இந்த நிலையில், திருவனந்தபுரத்திலிருந்து எஸ்யூவி காரில், ஸ்வப்னா தமிழகம் தப்பிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
    எஸ்யூவி காரில் தமிழகத்தின் நெல்லை மாவட்டம், செங்கோட்டை ரூட்டில் ஸ்வப்னா சென்றுள்ளார்.

    பெண்ணிடம் பேச்சு

    பெண்ணிடம் பேச்சு

    போகும் வழியில், அந்த கார் சிறிது நேரம் நின்றுள்ளது. அப்போது நந்தினி என்ற பெண்ணுடன் ஸ்வப்னா பேசியதாக கூறப்படுகிறது. இதை அந்த பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அவரிடம் சில ரூட்களை கேட்டதாகவும் தான் கூறியதாகவும், காருக்குள் குழந்தைகள் இருந்ததாகவும் நந்தினி தெரிவித்துள்ளார்.
    அதில் போனது ஸ்வப்னாதானா, தில்லாலங்கடி வேலை பார்த்த அவருக்கு ரூட் தெரியாதா என்ற கேள்விகளும் எழுகின்றன.

    விசாரணை

    விசாரணை

    இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து ஸ்வப்னாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில், ஏற்கனவே கேரள காவல்துறை மற்றும் சுங்கத்துறை ஷோபனாவை தேடி வருகிறது. மூணாறில் அவர் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஸ்வப்னாவை அங்கேயும் போலீசார் தேடியுள்ளனர். அவர் நாகர்கோவிலில் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டு, அங்கும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+