தமிழகம் தப்பி ஓடிய ஸ்வப்னா? வழியில் 'நந்தினியிடம்' பேசியதாக பரபர தகவல்.. வெளியான சிசிடிவி காட்சி
சென்னை: தமிழகத்தின் செங்கோட்டை பகுதிக்கு ஸ்வப்னா காரில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Recommended Video
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் வந்த நிலையில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய சரக்கு பிரிவில் ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்துஅந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியை திறந்து பார்த்தனர்.
அப்போது அதில் 30 கிலோ தங்கம் இருந்ததும், அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி என்பதும் தெரியவந்தது. சுங்க இலாகா அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியபோது, தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

வழக்கு மாற்றம்
இவர் கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் பணி புரிந்தவர் எனக் கூறி எதிர்க்கட்சிகள் பிரச்சினை கிளப்பின. எந்த விசாரணைக்கும் தயார் என்றார் பினராயி விஜயன். இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமை (NIA) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகள்
இந்த நிலையில், திருவனந்தபுரத்திலிருந்து எஸ்யூவி காரில், ஸ்வப்னா தமிழகம் தப்பிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
எஸ்யூவி காரில் தமிழகத்தின் நெல்லை மாவட்டம், செங்கோட்டை ரூட்டில் ஸ்வப்னா சென்றுள்ளார்.

பெண்ணிடம் பேச்சு
போகும் வழியில், அந்த கார் சிறிது நேரம் நின்றுள்ளது. அப்போது நந்தினி என்ற பெண்ணுடன் ஸ்வப்னா பேசியதாக கூறப்படுகிறது. இதை அந்த பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அவரிடம் சில ரூட்களை கேட்டதாகவும் தான் கூறியதாகவும், காருக்குள் குழந்தைகள் இருந்ததாகவும் நந்தினி தெரிவித்துள்ளார்.
அதில் போனது ஸ்வப்னாதானா, தில்லாலங்கடி வேலை பார்த்த அவருக்கு ரூட் தெரியாதா என்ற கேள்விகளும் எழுகின்றன.

விசாரணை
இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து ஸ்வப்னாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில், ஏற்கனவே கேரள காவல்துறை மற்றும் சுங்கத்துறை ஷோபனாவை தேடி வருகிறது. மூணாறில் அவர் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஸ்வப்னாவை அங்கேயும் போலீசார் தேடியுள்ளனர். அவர் நாகர்கோவிலில் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டு, அங்கும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
-
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications