நாடு முழுக்க ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு.. மிக முக்கியமான நல்ல செய்தி.. நிர்மலா அறிவிப்பு
சென்னை: நாடு முழுக்க ரேஷன் அட்டை வைத்து இருப்பவர்களுக்கு மிக முக்கியமான நல்ல செய்தி ஒன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமரின் ரேஷன் கார்டு திட்டமான, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் தொடர்பான முக்கியமான அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ளார்.
பிரதமரின் ரேஷன் கார்டு திட்டமான, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PM-GKAY) என்பது ஆத்மநிர்பர் பாரதத்தின் ஒரு பகுதியாக புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவதற்கான ஒரு திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் முறையே ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரையிலும், ஜூலை முதல் நவம்பர் 2020 வரையிலும் செயல்பட்டன. திட்டத்தின் மூன்றாம் கட்டம் மே முதல் ஜூன், 2021 வரை செயல்பட்டது. திட்டத்தின் படி-IV ஜூலை-நவம்பர், 2021 மற்றும் கட்டம் V டிசம்பர் 2021 முதல் மார்ச், 2022 வரை நடந்தது. தற்போது திட்டத்தின் அடுத்த கட்டம் இந்த வருடம் ஜனவரி முதல் நடந்து வருகிறது.
என்ன வழங்குகிறது: இத்திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்களை இந்த மையம் வழங்குகிறது. இது பொது விநியோக முறையின் (PDS) கீழ் உள்ள குடும்பங்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் வழங்கப்படும் மானியம் (ஒரு கிலோவுக்கு ரூ. 2-3) ரேஷனுடன் கூடுதலாக உள்ளது. சில மாநிலங்களில் உணவு தானியமும் அளவும் மாறுபடலாம்.
இந்த திட்டத்தோடு சேர்த்து உத்தரகண்ட் அரசு உப்பு வழங்க முடிவு செய்து உள்ளது. ரூ. 8 க்கு குறைந்த விலைக்கு அயோடின் உப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மக்களின் அயோடின் குறைப்பாட்டை போக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
எத்தனை பேர் பயன்: 2022 ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் முதல் 6 ஆம் கட்டத்திற்கான PMGKAY திட்டமானது மதிப்பிடப்பட்ட கூடுதல் உணவு மானியமாக ரூ. 80,000 கோடி செலவிடப்பட உள்ளது. 80 கோடி பேருக்கு இதனால் உணவு வழங்கப்படும்.
திட்டத்தின் நன்மைகள்: PMGKAY ஆனது ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ உணவு தானியத்தை இலவசமாக வழங்குகிறது மற்றும் பொது விநியோக முறை (PDS) மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட 5 கிலோ மானிய உணவு தானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும்.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு கோதுமை ஒதுக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு: இந்த நிலையில்தான் நாடு முழுக்க ரேஷன் அட்டை வைத்து இருப்பவர்களுக்கு மிக முக்கியமான நல்ல செய்தி ஒன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமரின் ரேஷன் கார்டு திட்டமான, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் தொடர்பான முக்கியமான அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ளார்.
அதன்படி 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் பிஎம் கரீப் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. PMGKAY ஆனது ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ உணவு தானியத்தை இலவசமாக வழங்குகிறது மற்றும் பொது விநியோக முறை (PDS) மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட 5 கிலோ மானிய உணவு தானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும். அதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications