10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குட்நியூஸ்.. ஆசிரியர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கை
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாட வினாத்தாள்களில் சில வினாக்கள் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆங்கிலம், அறிவியல் பாடத்தில் முரண்பாடான வினாக்களுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சமூக அறிவியல் தேர்வில் குறிப்பிட்ட வினாவுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்த நிலையில் இந்த கோரிக்கையை ஆசிரியர்கள் வைத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த ஏப்ரல் 15ம் தேதி நிறைவு பெற்றது. அதில் சமூக அறிவியல் பாடத் தோ்வில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 4-ஆவது கேள்வியாக, கூற்று: ஜோதிபா புலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தாா். காரணம்: ஜோதிபா புலே குழந்தைத் திருமணத்தை எதிா்த்தாா். விதவை மறுமணத்தை ஆதரித்தாா் என கூறப்பட்டிருந்து.

இந்தக் கேள்வியில் இரண்டு வாக்கியங்களுமே முரணாக இருந்ததாகத் தெரிவித்த ஆசிரியா்கள் இதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனா். இதற்கிடையே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் தொடங்கிவிட்டது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தோ்வில் 4-ஆவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே 1 மதிப்பெண் போனஸாக வழங்கப்படும் என்று தோ்வுத் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், அரசு தேர்வுகள் இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறுகையில், "2024-25-ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாட வினாத்தாள்களில் சில வினாக்கள் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாடத் தேர்வில், வினா எண் 7-ல் 'தமிழில் ஒரு கிலோ கிராம் எடை என்பதற்கு சமமாகும்' என வழங்கப்பட்டுள்ளது. அதுவே, ஆங்கிலத்தில் 'போர்ஸ்' அதாவது விசை என கூறப்பட்டுள்ளது.
தமிழில் எடை என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதேபோல், கேள்வி எண் 22-ல், தமிழ் வினாவில் மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு கொடுக்கப்படவில்லை. மேலும், ஆங்கில பாடத் தேர்வில், கேள்வி எண் 14, 18, 23, 44 ஆகியவையும் முரண்பாடாக அமைந்துள்ளது. எனவே இந்த கேள்விகளை எழுத முயற்சித்திருந்தாலே மதிப்பெண் வழங்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications