10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குட்நியூஸ்.. ஆசிரியர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கை
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாட வினாத்தாள்களில் சில வினாக்கள் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆங்கிலம், அறிவியல் பாடத்தில் முரண்பாடான வினாக்களுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சமூக அறிவியல் தேர்வில் குறிப்பிட்ட வினாவுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்த நிலையில் இந்த கோரிக்கையை ஆசிரியர்கள் வைத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த ஏப்ரல் 15ம் தேதி நிறைவு பெற்றது. அதில் சமூக அறிவியல் பாடத் தோ்வில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 4-ஆவது கேள்வியாக, கூற்று: ஜோதிபா புலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தாா். காரணம்: ஜோதிபா புலே குழந்தைத் திருமணத்தை எதிா்த்தாா். விதவை மறுமணத்தை ஆதரித்தாா் என கூறப்பட்டிருந்து.

இந்தக் கேள்வியில் இரண்டு வாக்கியங்களுமே முரணாக இருந்ததாகத் தெரிவித்த ஆசிரியா்கள் இதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனா். இதற்கிடையே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் தொடங்கிவிட்டது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தோ்வில் 4-ஆவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே 1 மதிப்பெண் போனஸாக வழங்கப்படும் என்று தோ்வுத் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், அரசு தேர்வுகள் இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறுகையில், "2024-25-ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாட வினாத்தாள்களில் சில வினாக்கள் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாடத் தேர்வில், வினா எண் 7-ல் 'தமிழில் ஒரு கிலோ கிராம் எடை என்பதற்கு சமமாகும்' என வழங்கப்பட்டுள்ளது. அதுவே, ஆங்கிலத்தில் 'போர்ஸ்' அதாவது விசை என கூறப்பட்டுள்ளது.
தமிழில் எடை என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதேபோல், கேள்வி எண் 22-ல், தமிழ் வினாவில் மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு கொடுக்கப்படவில்லை. மேலும், ஆங்கில பாடத் தேர்வில், கேள்வி எண் 14, 18, 23, 44 ஆகியவையும் முரண்பாடாக அமைந்துள்ளது. எனவே இந்த கேள்விகளை எழுத முயற்சித்திருந்தாலே மதிப்பெண் வழங்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications