Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்படி போடு! தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க்.. அதிரடியாக அறிவித்த அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் இரு நகரங்களில் கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்திலும் தொடர்ந்து தஞ்சை மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மற்றும் சேலத்திலும் மினி டைடல் பூங்க அமைக்கப்பட்டுள்ளது.

mini tidal park government of tamil nadu karur

இந்த நிலையில் தற்போது கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரைபட தயாரிப்பு, திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டரும் விடப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வகையில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்குவதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி தான் தற்போது கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான வரைபட தயாரிப்பு, திட்ட மேலாண்மை பணிக்கான ஆலோசகர்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரியிருக்கிறது தமிழக அரசு. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை உருவாக்குவதற்காகவும், மாநிலம் முழுவதும் இதனை விரிவுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+