புதிய கல்விக்கொள்கை பற்றி முதல்வரிடம் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் கூறுவோம் - செங்கோட்டையன்
புதிய கல்விக்கொள்கை பற்றி முதல்வருடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் கருத்து தெரிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை: தமிழகத்தில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை அறிவித்துள்ளது. தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி முதல்வருடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் கருத்து தெரிவிப்போம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
புதிய கல்வி கொள்கையின் படி கல்வி நிறுவனங்களில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் புதிய கல்வி கொள்கையில், பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் கைத்தொழில் கட்டாயம் கற்றுத்தரப்படும் இளங்கலை 3-4ஆண்டுகள் நடத்தப்படும். முதுகலை 1-2 ஆண்டுகள் நடத்தப்படும் இண்டகிரெட் இளங்கலை, முதுகலை இரண்டும் 5 ஆண்டுகள் அனுமதிக்கப்படும்.

உயர் கல்வி நிலையங்களில் தன்னாட்சி உரிமம் அளிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளில் சுயாட்சி முறை ஒழிக்கப்படும் உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும் இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் புதிய கல்விக்கொள்கை பற்றி தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், புதிய கல்விக்கொள்கை பற்றி முதல்வருடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் கருத்து தெரிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications