அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! கிராஜுவிட்டி தொகையை உயர்த்துவது எப்படி? பலரும் அறியாத வரி கணக்கீடு முறை
சென்னை: அரசு ஊழியர்கள் தங்களின் நீண்டகால சேவையை அங்கீகரிக்கும் வகையில் ஓய்வு பெறும்போது பெறும் மிக முக்கியமான பணப்பலன் கிராஜுவிட்டி ஆகும்.. இது ஊழியர்களின் அர்ப்பணிப்புள்ள உழைப்பிற்கு அரசு வழங்கும் ஒரு நிதி சார்ந்த நன்றிக்கடன் மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்கான ஒரு பெரும் முதலீடாகும்.. ஒரு ஊழியரின் பணிக்காலம் மற்றும் கடைசியாக பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் சட்டப்பூர்வமாக இந்த தொகை துல்லியமாகக் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது.. இதை பற்றி இங்கே சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
கிராஜுவிட்டி என்பது ஒரு தொழிலாளி தனது நிறுவனத்தில் அல்லது அரசுத்துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பணியாற்றியதற்காக வழங்கப்படும் ஒரு பணிக்கால வெகுமதியாகும்..

கிராஜுவிட்டி பலன்கள்
இது ஊழியரின் நீண்டகால உழைப்பைப் பாராட்டும் விதமாக ஓய்வுபெறும் போதோ அல்லது பணியிலிருந்து விலகும் போதோ மொத்தத் தொகையாக வழங்கப்படுகிறது.. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களை பொறுத்தவரை கிராஜுவிட்டி என்பது அவர்களின் பணிப் பாதுகாப்பின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது..
ஒரு அரசு ஊழியர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தகுதியான சேவையை முடித்திருந்தால் இந்த தொகையை பெறுவதற்கு அவர் முழு உரிமையாளராக மாறுகிறார்.. துரதிர்ஷ்டவசமாக பணியில் இருக்கும்போது ஒரு ஊழியர் இறக்க நேரிட்டால் 5 ஆண்டுகள் என்ற காலக்கெடுவின்றி அவரது குடும்பத்தினருக்கு இந்த தொகை உடனடியாக வழங்கப்படும்..
அரசு துறை ஊழியர்கள்
அரசு துறையில் கிராஜுவிட்டி கணக்கிடும் முறை மிகவும் தெளிவான விதிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.. இதை கணக்கிடுவதற்கு ஒரு ஊழியர் கடைசியாக வாங்கிய அடிப்படை சம்பளம் மற்றும் அதனுடன் இணைந்த அகவிலைப்படி ஆகிய இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்..
கிராஜுவிட்டியை கணக்கிடுவதற்கான முறையும் அரசின் தெளிவான விதிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகையை அடிப்படையாகக் கொண்டு கிராஜுவிட்டி கணக்கிடப்படுகிறது.
சம்பளம் + அகவிலைப்படி
இதற்கான பொதுவான சூத்திரம்: கிராஜுவிட்டி = (அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி) × 15 / 26 × மொத்த பணியாண்டுகள். அதாவது ஒரு ஊழியர் பணியாற்றிய ஒவ்வொரு முழு ஆண்டுக்கும் 15 நாட்கள் ஊதியம் கிராஜுவிட்டியாக வழங்கப்படும்.
உதாரணமாக ஒரு அரசு ஊழியர் 30 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெறுகிறார் என்றால் அவரது பணிக்காலத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக 16.5 மாதங்களுக்கான அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியை சேர்த்த தொகையை அவர் கிராஜுவிட்டியாக பெற முடியும்..
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், கிராஜுவிட்டி தொகைக்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இப்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி ஒரு அரசு ஊழியர் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கிராஜுவிட்டியாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது..
முழுமையான வரி விலக்கு
அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று இந்த கிராஜுவிட்டி தொகைக்கு அளிக்கப்படும் முழுமையான வரி விலக்காகும்.. தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வரி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது ஆனால் அரசு ஊழியர்கள் பெறும் பணிக்கால பணப்பலன்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் முழு விலக்கு அளிக்கப்படுகிறது..
அதுமட்டுமல்ல, அகவிலைப்படி உயரும் போதெல்லாம் அதற்கேற்ப கிராஜுவிட்டி கணக்கீடும் சாதகமாக அமைகிறது.. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கு பிறகு இந்த தொகை கணிசமாக உயர்த்தப்பட்டது ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
ஓய்வு காலத்திற்கு பிறகு ஒரு பெரிய தொகையை முதலீடு செய்யவும் அல்லது குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த கிராஜுவிட்டி நிதி ஒரு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது.. குறிப்பாக அரசு ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தின் இறுதியில் பெறும் இந்தச் சலுகை அவர்களின் எதிர்காலத் திட்டமிடலுக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைகிறது..!!












Click it and Unblock the Notifications