அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார்- ஆளுநர்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழக சட்டசபை கூடியது... ஆளுநர் உரை- வீடியோ
சென்னை: அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தொடங்கி வைப்பார் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றித் தொடங்கி வைத்தார்.

ஆளுநர் தனது உரையில் கூறுகையில் ரூ.1652 கோடி செலவில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கி வைக்கப்படும். இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தொடங்கி வைப்பார்.
இந்த கூட்டத்தில் மேகதாது, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சினைகள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications