அரசுக்கு நிதியுதவி குவிகிறது.. தமிழகத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடி கொரோனா நிதி!
சென்னை: தமிழகத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ரூ.1 கோடி கொரோனா நிதியை வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனவை கருத்தில் கொண்டு தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பணிகளை மேற்கொள்ள அரசுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது.இதனை தொடர்ந்து அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கினார்.
அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்துக்கு ரூ.1 கோடி கொரோனா நிதியை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார். அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோரும் ஸ்டாலினுடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications