செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்.. ஆளுநரும்தான்.. அடுத்தடுத்த நிகழ்வுகளால் சூடாகும் தமிழக அரசியல்!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்து வருவதால் மாநில அரசியல் சூடுபிடித்துள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு இன்றைய தினம் தமிழக அரசியல் சூடு பிடித்துள்ளது. காரணம் அதிமுக அரசின் மீது கத்தி தொங்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் அதை சமாளிக்க பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.
அதிமுக அரசு
தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இதில் தீர்ப்பு அரசுக்கு ஆதரவாக வந்ததால் அரசு தப்பியுள்ளது. அதேசமயம், எதிராக வந்திருந்தால் பெரும் பரபரப்பாகியிருக்கும்.
ஆலைகளில் அதிரடி ரெய்டு
இந்நிலையில் இன்னும் இரண்டரை ஆண்டுகால ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாகும் நிலையில் விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் ஆலைகளில் அதிரடியாக ரெய்டு நடந்துள்ளது.
அமைச்சரும் டெல்லி பயணம்
அதே வேளையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் இன்று டெல்லி செல்கிறார். ஆனால் அவர் யாரை பார்க்கிறார் என்பது தெரியவில்லை. அதுபோல் அமைச்சர் செங்கோட்டையனும் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அவரும் யாரை சந்திக்கவுள்ளார் என தெரியவில்லை. எனினும் அவர் கல்வி துறை சார்பாக அங்கு நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்எல்ஏக்கள் கூட்டம்
மறுபக்கம் தி்முக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. எனவே அடுத்தடுத்து நிகழும் இந்த பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. எனவே தீர்ப்பை பொருத்தே என்ன நடக்கும் என்பது தெரியும். ஒரு வேளை மேல்முறையீடு செய்ய இரு தரப்பும் முயற்சிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.