இன்று முதல் 2 நாள்.. தென்காசி, விருதுநகரில் ஆளுநர் ஆர்என் ரவி சுற்றுப்பயணம்! ஏன் தெரியுமா? பின்னணி
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி 2 நாள் பயணமாக இன்று தென்மாவட்டங்களுக்கு விசிட் செய்கிறார். தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ள நிலையில் அதுபற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்என் ரவி உள்ளார். இவர் அவ்வப்போது தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். அடிக்கடி இவரது பேச்சு என்பது விவாதத்தையும் ஏற்படுத்தும்.

மேலும் அவ்வப்போது ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கருத்து மோதல்களையும் ஏற்படுத்தும். இந்நிலையில் தான் இன்றும், நாளையும் ஆளுநர் ஆர்என் ரவி 2 நாள் பயணமாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து ஆளுநர் ஆர்என் ரவி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்திறங்க உள்ளார். அதன்பிறகு அங்கிருந்து காரில் தென்காசி மாவட்டம் குற்றாலம் சென்று விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடுகிறார்.
பிறகு ஆழ்வார்குறிச்சியில் பாரம்பரியமாக பானை தயாரிக்கும் தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார். மாலையில் சிவசைவம் அவ்வை ஆசிரமத்துக்கு சென்று ஆசிரம குழந்தைகள் மற்றும் பணியாளர்களை சந்தித்து பேச உள்ளார். அதன்பிறகு இரவில் ஓய்வு எடுக்கும் ஆளுநர் ஆர்என் ரவி மறுநாள் காலையில் 2வது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
அதன்படி நாளை கோவிந்தப்பேரி சென்று நெல்கட்டும் செவல் கிராமத்தில் பூலித்தேவர் அரண்மனையை பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து ஒண்டி வீரன் நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார். பின்னர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள விஸ்வகர்மா சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
மேலும் சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று பாண்டியன் தீப்பெட்டி கம்பெனி தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். இதையடுத்து விருதுநகர் சென்று பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்னர் நாளை இரவு மதுரை சென்று விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications