மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதமா? அப்படியெல்லாம் இல்லையே! ஆளுநர் மாளிகையிருந்து வந்த விளக்கம்
சென்னை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையானோர் ஆதரவுடன் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து தாமதித்து வருகிறார் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
அதில், "மக்கள் நலனுக்கு எதிரான சில ஆதாரமற்ற, உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்க, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த கவனத்துடன் மசோதாக்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

நேர்மை, வெளிப்படைத்தன்மை, அர்ப்பணிப்புடன் அரசியலமைப்பு கடமைகளை செய்து வருகிறார் ஆளுநர். 13% மசோதாக்கள் குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த 13% மசோதாக்களில் 60% மாநில அரசின் பரிந்துரையின் பேரில் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மசோதாக்கள் அக்டோபர் 2025 கடைசி வாரத்தில் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications