12ஆம் வகுப்புப் புத்தகத்தில் "தமிழை விட" சமஸ்கிருதம்.. உள்நோக்கம் இருப்பதாக வேல்முருகன் பகீர்
சென்னை: இல்லாத சமஸ்கிருதத்தை எட்டாவது அட்டவணையில் சேர்த்த அந்தப் பொல்லாத செயல்தான், இன்று 12ஆம் வகுப்புப் புத்தகத்தில் தமிழின் மீதே சமஸ்கிருதத்தை ஏற்றிவைத்து இருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்வேறு மொழியின தேசிய அரசுகளின் இணையம்தான் இந்தியா. அதைக் குறிக்கும் விதமாக அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பல மொழிகள் உள்ளன. முன்பு 18 மொழிகள் இடம்பெற்றிருந்த அதில் இப்போது 22 மொழிகள் உள்ளன.

சம்ஸ்கிருதம் சேர்ப்பு
அப்படியென்றால் 4 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் பொருள், முன்பே இந்த நான்கு மொழிகளையும் சேர்க்காது பிழை செய்திருக்கிறார்கள் என்பதே. இது மட்டுமே பிழை அல்ல. இதுபோல் இல்லாத சமஸ்கிருதத்தை எட்டாவது அட்டவணையில் சேர்த்திருப்பதும் பிழைதான்.

எப்படி பேசுவார்கள்
இல்லாத சமஸ்கிருதம் என்பது மிகச் சரிதான். நேற்று வரை சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் 13 ஆயிரம் பேர் என்றார்கள்; இன்றோ அவர்கள் 24 பேர் என்கிறார்கள். நாம் கேட்பது இதுதான்: சமஸ்கிருதம் தெரிந்த இவர்களில் இரண்டு பேர் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் வைத்துக் கொள்வோம்; அப்போது எந்த மொழியில் பேசுவார்கள்? நிச்சயம் அது சமஸ்கிருதமாக இருக்காது என்பதுதான் உண்மை.

சமஸ்கிருதம் யாருக்கு தாய்மொழி
இதன் பொருள், சமஸ்கிருதம் யாருக்குமே தாய்மொழியாக இல்லை என்பதுதான். இந்த நடைமுறை உண்மையைக் கொண்டுதான் சமஸ்கிருதத்தை இல்லாத மொழி என்கிறோம். இறந்துபோனவரை அவர் இல்லை என்று சொல்வதைப் போல! ஆனாலும் இறந்துபோனவர் பேசியவற்றை, எழுதியவற்றை, செய்தவற்றை நாம் பேசுவது, எழுதுவது, செய்வது என்பது வேறு.

உள்நோக்கம் அல்லவா
12ஆம் வகுப்புப் புத்தகத்தில் "தமிழை விட..." என்று குறிப்பிடுவதற்கு என்ன வந்தது? அப்படிக் குறிப்பிடுவதே "உள்நோக்கம் - தீய எண்ணம் - குற்றம்" அல்லவா?

தமிழ் மக்களை மேலாதிக்கம்
இன்னும் பண்பாட்டின் சுவடு கூட அறியாத பெரும்பாலான இந்தி பேசும் அப்பாவி மக்களை "வகுப்புவாத-மதவாத" வெறியூட்டி, அந்த வாக்கு வங்கியால் ஆட்சியைப் பெற்று, பண்பாட்டில் இமயத்தின் முகடையே தொட்டிருக்கும் தமிழ் மக்களை மேலாதிக்கம் செய்கிறது சனாதனச் சாதிய ஆர்எஸ்எஸ் பாஜக. தன்மானத்தை விட்டு பாஜகவுக்கு அடிமைப்பட்டுப்போன அதிமுகவின் துணையின்றி எப்படி 12ஆம் வகுப்புப் புத்தகத்தில் தமிழின் தலை மீது சமத்கிருதத்தை ஏற்ற முடியும்? நடைமுறையை நோக்கியறிதலே வரலாற்று அறிவியல். அதன்படியே உரைக்கிறோம்:

8வது அட்டவணையில்
இல்லாத சமஸ்கிருதத்தை எட்டாவது அட்டவணையில் சேர்த்த அந்தப் பொல்லாத செயல்தான், இன்று 12ஆம் வகுப்புப் புத்தகத்தில் தமிழின் மீதே சமஸ்கிருதத்தை ஏற்றிவைத்தது! இது குறித்த அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு "தூக்கத்தில் உளறலாக" இருந்துவிடக் கூடாது என்று சொல்லும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, "எட்டாவது அட்டவணையிலிருந்து சமஸ்கிருதத்தை நீக்கு!" என்று போர்க்குரல் எழுப்புகிறது! " இவ்வாறு கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications