முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுக்... லண்டனில் கல்லறை சேதம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேயர் பென்னிகுக்கின் லண்டன் கல்லறை சேதப்படுத்தப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணையை லண்டனில் உள்ள தமது சொத்துகளை விற்று சொந்தப் பணத்தில் கட்டி முடித்தார் ஆங்கிலேயர் பென்னிகுக்.
அவரது பெரும்முயற்சியால்தான் தென்மாவட்டங்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்றளவும் பென்னிகுக்கை குலசாமியாக போற்றி பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர் தென்மாவட்ட மக்கள்.
சொந்த பணத்தில் அணை: தென் மாவட்டங்களில் கடவுளாக வணங்கப்படும் பென்னி குவிக்...
பென்னி குவிக் பிறந்தநாள் விழா: கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு
#HBDPennycuick .. மேற்கே பாயும் நதியை கிழக்கே திருப்புவது சாத்தியமா? என்ன செய்தார் பென்னிகுக்?
சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக் திருவுருவ படத்திறப்பு விழா
பென்னிகுக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லண்டனில் உள்ள பென்னிகுக் கல்லறை சேதப்படுத்தப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் படங்களுடன் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான விசாரணைகளும் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.