400 இடங்களில் சிறப்பு முகாம்.. ஒரே நாளில் 1.25 பேருக்கு வேக்சின்.. சென்னை மாநகராட்சி புதிய சாதனை!
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் இன்று நடைபெற்ற 400 கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1,25,147 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முதல்முறையாக இவ்வளவு பேருக்கு சென்னையில் வேக்சின் அளிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் சரிந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் வேக்சின் போடுவதும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1559 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 26 பேர் பலியாகி உள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை 34,814 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 2,98,60,920 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 2,40,84,430 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 57,76,490 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இன்று இதுவரை 3,99,931 பேருக்கு வேக்சின் போடப்பட்டள்ளது.

இன்று
இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் இன்று நடைபெற்ற 400 கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1,25,147 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி
மேலும், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 25.08.2021 வரை 25,94,016 முதல் தவணை தடுப்பூசிகள், 11,22,132 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 37,16,148 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

முகாம்
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 1 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சியின் சார்பில் ஒரு வார்டிற்கு 2 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என மொத்தம் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று (26.08.2021) நடத்தப்பட்டது.

எத்தனை
இன்று நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்களில் மாநகராட்சி மண்டல அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மக்களுக்கு வேக்சின் கொடுக்கப்பட்டது. இதன் மூலாம் இன்று சென்னை மாநகரில் வசிக்கும் 125,147 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது சென்னை மாநகராட்சியில் நாளொன்றிற்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிகைகளில் அதிகபட்சமானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications