தமிழக அரசின் குரூப் தேர்வு எழுதுபவர்களே ரெடியா இருங்க.. டிஎன்பிஎஸ்சி தலைவர் சொன்ன குட் நியூஸ்
சென்னை: தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு அரசு பணிக்காக காத்திருக்கும் பல லட்சம் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் தேர்வு அறிவிப்பினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் தற்போது வெளியான டிஎன்பிஎஸ்சியின் வருடாந்திர தேர்வு அட்டவணையில், என்னென்ன தேர்வுகள், தேர்வு அறிவிப்பு வெளியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. எத்தனை காலியிடங்கள் என்பது இடம்பெறாத நிலையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வழியாக நிரப்பப்படுகிறது. அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2, 2 ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் தேர்வு நடத்தி ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

குரூப் தேர்வுகள்
தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு அரசு பணிக்காக காத்திருக்கும் பல லட்சம் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் தேர்வு அறிவிப்பினை ஆவலோடு காத்து இருக்கிறார்கள். தேர்வர்கள் தேர்வுக்கு தயாராக இருப்பதற்கு ஏதுவாக தற்போது ஆண்டு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பினை கடந்த ஆண்டு இறுதியில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
இதில், குரூப்-1 தேர்வு, குரூப்-2, 2ஏ தேர்வு, குரூப்-4 தேர்வு என மொத்தம் 7 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. தேர்வர்கள் அதிகம் எழுதும் குரூப் தேர்வு 4 தேர்வு அறிவிப்பு வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியிடப்படும். வரும் ஜூலை மாதம் 13 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குரூப் 2 தேர்வு ஜூலை 15 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும், செப்டம்பர் 28 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடத்தப்படும். குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகும், குரூப் 1 தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வர்கள் ஏமாற்றம்
வருடாந்திர தேர்வு அட்டவணையில், என்னென்ன தேர்வுகள், எத்தனை காலியிடங்கள் என்பன உள்ளிட்ட விவரங்கள் வழக்கமாக இடம் பெறும். ஆனால், 2025- ஆம் ஆண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி, காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இதனால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அது மட்டும் இன்றி முன்பு தனித்தனி தேர்வாக நடத்தப்பட்டு வந்த பல தேர்வுகள் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகள் (இண்டர்வியூ), ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தேர்வுகள் (Non interview) என இரு பெரிய தேர்வுகளாக சுருக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இதில் எத்தனை காலிப்பணியிடங்கள் என்ற விவரம் இல்லை.
தேர்வுகள் எப்போது?
இந்த நிலையில்தான், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்கே பிரபாகர் முக்கியமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:- 2024-25 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 2025- 26 நிதி ஆண்டுக்கான காலிப்பணியிட விவரங்கள் ஏப்ரல் மாதம் தான் தெரிய வரும். தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்படும் போது அதில் காலிப்பணியிடங்கள், எந்தெந்த பதவிகள் என்பது பற்றிய அறிவிப்பு இருக்கும்.
தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை உரிய நேரத்தில் வெளியிட முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேர்வுகளின் முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இதன்படி வரும் வாரத்தில் இந்த தேர்வு முடிவு வெளியிடப்படும்" என்று கூறினார்.
-
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
IT JOBS: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. இந்த வேலைவாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
மத்திய ஆயுத காவல் படையில் வேலை.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. 69 ஆயிரம் வரை சம்பளம்.. செம சான்ஸ்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications