நேற்று கூட அந்த நபர் மருத்துவரிடம்.. கிண்டி விவகாரத்தில் காவல் ஆணையர் அருண் புதிய தகவல்
சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மூத்த மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். அப்போது கிண்டி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை புற்றுநோய் துறை தலைவராக இருப்பவர் மருத்துவர் பாலாஜி. இவர் காலை பணியில் இருந்தபோது பெருங்களத்தூரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் விக்னேஷ் என்பவர் பாலாஜியை பார்க்க சென்றுள்ளார். அப்போது விக்னேஷ் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பாலாஜியை சரமாரியாக தாக்கினார்.

இதில் சுமார் ஏழு இடங்களில் படுகாயமடைந்த பாலாஜிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. முக்கியமாக மருத்துவர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் தள பக்கத்தில், இந்த வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியிருந்தார். இதுகுறித்து விக்னேஷ் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். விக்னேஷின் உறவினர் உள்பட மேலும் சிலரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. தனது அம்மாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்காத ஆத்திரத்தில், நண்பர்களுடன் இணைந்து பாலாஜியை கத்தியால் குத்தியதாக விக்னேஷ் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அருண், அரசியல் விமர்சனங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. இந்த மருத்துவமனையில் முதல்முறையாக இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் தன் அம்மாவின் சிகிச்சைக்காக கடந்த ஆறு மாதங்களாக மருத்துவமனையில் உள்ளார். நேற்று கூட அதே மருத்துவரிடம் பேசியிருக்கிறார்.
இப்போதுதான் புகாரளித்துள்ளனர். விரைவில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகரத்தில் ராஜீவ் காந்தி, கீழ்பாக்கம், ஸ்டான்லி, ஓமந்தூரார் உள்ளிட்ட 4 அரசு மருத்துவமனைகளில் தனித்தனி காவல்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ உள்ளிட்ட 30 காவலர்கள் இருக்கிறார்கள். முன்பு அவை ஓபி நிலையமாக மட்டுமே செயல்பட்டு வந்தது.
காவல்நிலையம் இல்லாத மருத்துவமனைகளில் ஓபி நிலையம் செயல்படுகிறது. கிண்டி அரசு மருத்துவமனையிலும் ஓபி நிலையம் அமைத்து போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடக்கவில்லை. என்று கூறினார்.
இந்நிலையில் மற்ற சம்பவத்துக்கும், இதற்கும் வித்தியாசம் உள்ளது. எனவே எந்தப் பிரிவில் வழக்கு பதியப்படும். இதற்கென தனிப்பிரிவு ஏதாவது பதிவு செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அருண், இது கொலை முயற்சி வழக்கு தான். சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications