படுபயங்கரமான போட்டோ.. ரிலீஸ் செய்த பாஜக எச்.ராஜா.. செம்ம உக்கிரம்.. திகிலில் திருச்சி போலீஸ்!
சென்னை: பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் திருச்சியில் கைது செய்யப்பட்ட போது எடுத்த படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் இதுவரை அவர் காட்டாத உக்கிரத்தை முழுவீச்சில் காட்டி இருப்பதால் சமூக வலைதளங்களில் வழக்கமாக 'கமெண்டுகள்' விழுகின்றன.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்பது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து. அதுவும் டெங்கு, மலேரியா, காலரா போல சனாதனத்தை ஒழிப்போம் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதனால் ஒட்டுமொத்த இந்திய சனாதன நம்பிக்கையாளர்களும் கொந்தளித்து போயினர். பிரதமர் மோடியே மத்திய அமைச்சரவையை கூட்டி விவாதிக்கும் அளவுக்கு உச்சமானது.

இதனிடையே திமுகவையே டெங்கு, மலேரியா, காலரான என தமிழ்நாடு பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் எச்.ராஜா உள்ளிட்டோரும் இதனை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலடி தரும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், கொசுவர்த்தி சுருள் எரியும் படம் ஒன்றை மட்டும் பதிவிட்டுள்ளார். அதில் எந்த கருத்தும் எழுதப்படவில்லை. இது மிகப் பெரிய புதிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.
இப்படத்துக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள எச்.ராஜா, ஸனாதன தர்மத்தை காப்போம் என்றதால் பாஜக வினர் கைது செய்யப்பட்டுள்ளோம். ஆனால் உதயநிதி சனாதனவாதிகளை மலேரியா, டெங்குஆகிய கொசு மருந்து கொண்டு கொல்லுவோம் என்ற இந்து விரோதி உதயநிதிக்கு சல்யூட் அடிப்பார்கள் என முதலில் பதிவிட்டார்.
அதற்கு அடுத்ததாக அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்யும் ஒரு படத்தை இன்று திருச்சியில் கைது செய்யப்பட்டபோது என்ற தலைப்பில் எச்.ராஜா வெளியிட்டார். இதுவரை இல்லாத அப்படி ஒரு கோபம், அப்படி ஒரு உக்கிரத்தை எச்.ராஜா அந்த படத்தில் காட்டியிருக்கிறார். திருச்சி போலீசாரை மிரட்டும் வகையில் அந்த படம் இருப்பதாகவே தெரிகிறது. தமிழக ஊடகங்களில் இப்படி ஒரு உக்கிரமான முகத்தை எச்.ராஜா இதுவரை வெளிப்படுத்தியதில்லை என்பது சமூக வலைதளங்களின் பொதுவான கருத்து.












Click it and Unblock the Notifications