எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியவர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.. எச் ராஜா ஆவேசம்!
சென்னை: எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டதற்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசித்து வருபவர் ஜெயமோகன். எழுத்தாளரான இவர் தமிழில் நான் கடவுள், கடல், 2.0, சர்கார் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள மளிகைக்கடையில் தோசைமாவு வாங்கியுள்ளார். மாவு புளித்து போயிருந்ததால் வேண்டாம் என திருப்பிக்கொடுத்தாக தெரிகிறது.

தாக்குதல்
அப்போது கடைக்காரருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஜெயமோகன் தாக்கப்பட்டுள்ளார். கடைக்காரருடன் சேர்ந்து அப்பகுதியை சேர்ந்த சில நபர்களும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

விசாரணை
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கடைக்காரர் செல்வம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாக்கப்பட்ட ஜெயமோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எச் ராஜா கண்டனம்
எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக தேசிய செயலாளரான எச் ராஜாவும் ஜெயமோகன் தாக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
|
தண்டிக்கப்பட வேண்டும்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். அவரை தாக்கியவர் எந்த அரசியல் தலையீட்டிற்கும் இடமளிக்காமல் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications