சி.என். அண்ணாதுரையே இந்து விரோதிதானே.. எச். ராஜா பொளேர் டிவீட்!
சென்னை: முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையே கூட ஒரு இந்து விரோதிதான் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
கந்த சஷ்டி கவசத்தை அவமதித்தது, இந்துக் கடவுள்களை அவமதித்தது, பெரியார் சிலைக்கு அவமதிப்பு என தமிழகம் தொடர்ந்து சூடாகவே காணப்படுகிறது. கந்த சஷ்டி விவகாரத்தில் கருப்பர் கூட்டம் மீது போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒருவர் கைது செய்யபட்டார். இன்னொருவர் சரணடைந்தார்.

இந்த நிலையில் பெரியார் சிலைக்கு அவமதிப்பு என்ற பிரச்சினை வெடித்து அது விஸ்வரூபமானது. இதையடுத்து பெரியாராவது மயிராவது என்ற ஹேஷ்டேக்கை சிலர் டிவிட்டரில் டிரண்டாக்கியுள்ளனர். மறுபக்கம் அதற்குப் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பின்னணியில் எச். ராஜா ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் திமுகவின் முதல் முதல்வரும், திமுகவின் நிறுவனருமான முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை அவர் இந்து விரோதி என்று வர்ணித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், இந்து விரோத திக, திமுக: அண்ணா இந்து விரோதி என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியாது என்பதால் பல பொய்கள் பரப்பப் படுகின்றன. கீமாயணம் எழுதியது யார்? அடியே மீனாட்சி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி கழட்டடி கள்ளி என்று மதுரை மீனாட்சி அம்மனை இழிவாக பேசிய சி.என்.அண்ணாதுரை இந்து விரோதியே என்று எச். ராஜா கூறியுள்ளார்.

அண்ணாவின் பெயர் தற்போது சந்திக்கு இழுக்கப்பட்டுள்ளதால் திமுக மட்டுமல்லாமல் அதிமுகவும் கூட இதற்குப் பதில் சொல்லியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அடுத்து அண்ணா தொடர்பான சர்ச்சைகள் வெடிக்கும் என்று தெரிகிறது.
-
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications