வைகோவ பார்த்து என்ன எச் ராஜா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு? ஆக்கப்பூர்வமான சிந்தனை அற்ற நபராம்
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் ஆக்கப்பூர்மான சிந்தனை அற்ற நபர் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா விளாசியுள்ளார்.
இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் மும்மொழி கொள்கையை கொண்டுவர கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்தது. கஸ்தூரி ரங்கன் பரிந்துரையை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வந்தது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன.

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு
சமூகவலைதளங்களிலும் இந்தி திணிப்புக்கு எதிராக பெரும் எதிர்ப்பு எழுந்தது. பிரபலங்கள் பலரும் இந்தி திணிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.

பின்வாங்கிய மத்திய அரசு
விவகாரம் வில்லங்கமாவதை உணர்ந்த மத்திய அரசு புதிய கல்விக்கொள்கைக்கான கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கையை திரும்பபெற்றது. இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் முயற்சியை கைவிட்டது.

வைகோவை விளாசிய எச் ராஜா
இந்நிலையில் ஸ்டாலின் கட்டளையிட்டால் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தீயிட்டு கொளுத்துவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருந்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் வைகோவை விளாசியிருக்கிறார்.

ஆக்கப்பூர்வமான சிந்தனை அற்ற நபர்
அதாவது வைகோ ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனை அற்ற நபர் என எச் ராஜா கூறியுள்ளார். ஏற்கனவே வைகோ மத்திய அரசு குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

எச் ராஜா விமர்சனம்
அப்போதே வைகோவை மிரட்டும் வகையில் எச்சரித்திருந்தார் எச் ராஜா. இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் வைகோ ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனை அற்ற நபர் என விமிர்சித்திருக்கிறார் எச் ராஜா.

பெற்றோரை கேட்க வேண்டும்
மேலும் பள்ளிகளில் இந்தி மொழியை கற்பிக்க ஆதரவாகவும் எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள கருத்தில் சிபிஎஸ்சி மற்றும் தனியார் பள்ளிகளில் மும்மொழி கற்க வாய்ப்புள்ளது.பணம் படைத்த திக,திமுக,மதிமுக,கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். இதில் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் கருத்து கேட்கப்பட வேண்டும்

வியாபார ஸ்தாபனங்கள்
இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக கூட்டணி தலைவர்கள் தயாராக உள்ளோம் என்றும் இன்னும் சில தினங்களில் போராட்டத்திற்காக ஒன்றுகூட உள்ளோம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதற்கும் எச்ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் எச் ராஜா பதில் கூறியுள்ளார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications