திருச்சி இளைஞர் உயிரிழப்புக்கு காரணம் கொரோனா இல்லையா? H3N2 வைரஸ் தான் காரணமா? வெளியான பரபர தகவல்!
திருச்சியில் கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கு H3N2 வைரஸ் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை: கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 27 வயது இளைஞர் கடந்த 11 ஆம் தேதி உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இளைஞர் மரணத்திற்கு H3N2 காரணமாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும் பரிசோதனை முடிவுகளுக்கு பிறகு இதை உறுதி செய்ய முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
குறிப்பாக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகரங்களில் அதிக அளவில் காய்ச்சலால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கு திருச்சி நபர் பலி
கடந்த 10 ஆம் தேதி தமிழகம் முழுக்க ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இது ஒருபக்கம் இருக்க கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நேற்று முன் தினம் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலியானதாக செய்திகள் வெளியாகியது. திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த 27-வயது இளைஞர் ஒருவர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
ஆனால், தொற்று உறுதி செய்யப்பட்ட பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பே, அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியதால், அவர் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் அவர் உயிரிழந்தது தமிழத்தில் மீண்டும் கொரோனா குறித்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இளைஞர் பலியானது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவா சென்று வந்திருக்கிறார்
திருச்சியை சேர்ந்தவர் 27-வயது மதிக்க தக்கவர். பெங்களூரில் வசித்துக் கொண்டிருந்தவர். பெங்களூரில் வசித்து வந்த அவர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி கோவாவிற்கு சென்று வந்து இருக்கிறார். அவருக்கு உடல் நிலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டதும் சொந்த ஊரான திருச்சிக்கு வந்து இருக்கிறார். திருச்சியில் ஜிவிஆர் என்று சொல்லப்படும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கொரோனா பாசிட்டிவ் இருந்தது
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போதே அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மோசமான உடல் நிலையுடன் தான் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்று மருத்துவமனையின் இறப்பு அறிக்கையில் உள்ளது. அவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்திருக்கிறது. கொரோனா பாதிப்பா அல்லது எச்3 என் 2 பாதிப்பா என்பது உறுதி செய்யப்படாத ஒன்றாக உள்ளது. அவருடைய மாதிரிகளை தற்போது ஆய்வகத்திற்கு அனுப்பியிருக்கிறோம். ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

மிக விரைவில் அறிவிப்போம்
ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மிக விரைவில் பரிசோதனை முடிவுகள் வெளிவந்த உடன் மரணம் எப்படி நேர்ந்தது என்பதை உங்களிடம் தெரிவிப்போம். அவர் வரும் போதே கொரோனா பாசிட்டிவ் இருந்துள்ளது. வரும் போதே மோசமான பாதிப்புடன் வந்திருப்பதாக மருத்துவமனை கூறியிருக்கிறது. வேறு ஏதேனும் இணை நோய் பாதிப்பு இருந்துள்ளதா என்பதை கண்டறிந்து மிக விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications