தாசில்தாரிடம் அரை கிலோ தங்கம்.. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், வங்கியில் ரொக்கம்? திகைத்து நிற்குது ஒடிசா
சென்னை: ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அங்கிருந்து விலகவில்லை.. ஜிதேந்திர குமார் எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தார்? என்ற ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறார்கள்.. மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்து விவரங்களை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளனர்.. இது தொடர்பான விசாரணையும் அங்கு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஒரிசா ஊழல் தடுப்பு பிரிவு துறையினர், கட்டாக் மாவட்டம் பரங்காவில் முக்கிய அதிரடி ஒன்றை மேற்கொண்டனர்.. அதாவது அங்கு கூடுதல் தாசில்தாராக பொறுப்பு வகித்து வரும் ஜிதேந்திர குமார் பாண்டா மற்றும் கியோஞ்சர் மாவட்டம் பாஞ்சோ ஜிபியில் பஞ்சாயத்து செயல் அதிகாரியாக உள்ள ஜிதேந்திர குமார் ஜேனாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

காரணம் இவர்கள் 2 பேருமே வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக ஒடிசா ஊழல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.. இந்த அடிப்படையில் இருவருக்கும் சொந்தமான பல்வேறு இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்..
தாசில்தார் தங்கம், நிலம், சொத்து
அப்போது, வணிக வளாகங்கள், வீடுகள், மனைகள் வாங்கி குவித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், 100 கிராம் தங்கம், ரூ.34.06 லட்சம் டெபாசிட் ஆவணங்கள், கார் உள்ளிட்டவையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதில் பாண்டாவிடம் புவனேஸ்வரில் 2 பங்களாக்கள் , குர்டா நகரில் அப்பார்ட்மென்ட், ஏக்கர் கணக்கில் 4 நிலங்கள், இருந்தது. மேலும் ரூ.73.66 லட்சம் ரொக்கம், 560 கிராம் தங்கம், ரூ.36.97 லட்சம் வங்கி வைப்பு, காஸ்ட்லி கார் என மொத்த சொத்துகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..
மலைக்க வைத்த சொத்து
அதேபோல ஜேனாவின் சொத்துகளை பார்த்து அதற்கு மேல் ஆச்சரியப்பட்டனர்.. 3 மாடி கட்டிடம், ரூ.1.34 கோடியே மதிப்பில், 2 மாடி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஏக்கர் கணக்கில் நிலங்கள், 100 கிராம் தங்கம், ரூ.34.06 லட்சம் வங்கி வைப்பு மற்றும் ஒரு காஸ்ட்லி கார் என சொத்துக்கள் நீள்கின்றன.. இதையடுத்து, இவர்கள் இருவர் மீதும் தனித்தனியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
பரங்காவின் கூடுதல் தாசில்தாராக பொறுப்பு வகித்து வருபவர் ஜிதேந்திர குமார் பாண்டா. கியோஞ்சர் மாவட்டம் பாஞ்சோ ஜிபியின் பஞ்சாயத்து செயல் அதிகாரியாக உள்ளவர் ஜிதேந்திர குமார் ஜெனா. இவர்கள் இருவருக்கும் எப்படி இவ்வளவு சொத்துக்கள் சேர்ந்தன? எப்படி சம்பாதித்தார்கள் என்று ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனராம்.
2 அதிகாரிகளிடம் விசாரணை
தற்போது இருவருக்கும் சொந்தமான பல்வேறு இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.. மேலும் 2 அதிகாரிகளையும் கைது செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல மக்களின் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு கிளம்பி உள்ளது.. ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்மக எடுக்கப்படும் என்றும் விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications