Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோழிங்கநல்லூருக்கு நற்செய்தி.. குஷியில் சிறுசேரி.. ஆபீசர்ஸின் சர்ப்ரைஸ்.. சென்னைக்கு ஹேப்பி நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தின் அதிரடிகள் துரிதமாகி வரும்நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் பெருகிவரும் நிலையில், இவைகளை சமாளிக்கவும், பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை: அந்தவகையில், சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.

Happy Announcement for Chennai Sholinganallur to Siruseri and phase ii metro rail project resume soon

இதில், மாதவரம் - சோழிங்கநல்லூர் ( 5-வது வழித் தடம் ), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி ( 4-வது வழித் தடம் ) இடையேயான மெட்ரோ ரயில் பாதை சில இடங்களில் இணைகின்றன. குறிப்பாக, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலப்பாதைகள் வரப்போகின்றன.

ராட்சத இயந்திரங்கள்: எனவே, 3.75 கி.மீ. தொலைவுக்கு இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றன.. லாஞ்சிங் கிர்டர் வகையை சேர்ந்த ராட்சத இயந்திரங்கள், கிரேன்கள் இதற்காகவே பிரத்யேகமாக களமிறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித் தடத்தில், சோழிங்கநல்லூரில் இருந்து சிறுசேரி வரை தடைபட்டிருந்த மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறுசேரி: ஓஎம்ஆர்சாலையில் நேரு நகர் முதல் சிறுசேரி சிப்காட் வரை உயர்மட்டப்பாதை பணிகள் கடந்த வருடம் முதல் ஆரம்பமான நிலையில், சோழிங்கநல்லூர் - சிறுசேரி வரை 10 கி.மீ. தூரத்துக்கு உயர்மட்ட பாதைக்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்தன.. பிறகு சாலை தடுப்புகளும் அமைக்கப்பட்டு வந்தன.

சோழிங்கநல்லூர் - சிறுசேரி சிப்காட் இடையே 9 மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம், கடந்த வருடம் வழங்கப்பட்ட நிலையில், பணிகள் ஆரம்பமாயின.

வழித்தடம்: மாதவரம்-சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில், சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரையிலான உயர்மட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு ரூ.1,134 கோடியே 11 லட்சம் மதிப்பில் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருந்தது.

இந்த ஒப்பந்தம் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி ஆகும். இது சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டத்திற்கான கடைசி உயர்மட்ட வழித்தட ஒப்பந்தமும் ஆகும்..

ஒப்பந்ததாரர்: இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், உயர்மட்ட வழித்தடம் (தோராயமாக 10 கிமீ நீளம்) அமைத்தல் மற்றும் 9 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பதுதான்.. இதற்கு பிறகு, இந்த நிறுவனம், கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள துணை ஒப்பந்ததாரரை நியமித்தது. ஆனால், அவர்கள் பணியை தொடங்காததால், திட்டப் பணியில் தாமதம் ஏற்பட்டுவிட்டதாம். தற்போது, விரைவில் இந்த பணிகள் தொடங்க போகிறார்களாம். இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சொல்லும்போது, ஒப்பந்ததாரர் கடந்த வருடம் பணியை தொடங்கினாலும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஆர்விஎன்எல் நியமித்த ஏஜென்சி அல்லது துணைஒப்பந்ததாரர் அதை செய்யவில்லையாம்..

கட்டுமான பணிகள்: எனவே, ஏஜென்சியின் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுவிட்டதாம். தற்போது, பணியை மேற்கொள்ள வேறு ஒரு புதிய நிறுவனத்தை அடையாளம் கண்டுள்ளதால், கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+