Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில் பயணத்தில் குழந்தைகளுக்கு ஹேப்பி! படுக்கை வசதி டிக்கெட்டில் 'டபுள் ஆப்ஷன்' சர்ப்ரைஸ் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரயில்வே, பயணிகளின் நலனையும், வசதியையும் கருத்தில் கொண்டுதான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.. இதில் சில சலுகைகளையும் வழங்கி உள்ளது.. அந்தவகையில் ரயிலில் பயணம் செய்யும்போது, குழந்தைகளுக்கு எத்தனை வயது வரை டிக்கெட் எடுக்க வேண்டும், யார் யாருக்கு சலுகைகள் உண்டு என்பது குறித்து பலருக்கும் குழப்பம் இருக்கலாம்.. சோஷியல் மீடியாவில் பரவும் சில தவறான தகவல்களால் பயணிகள் அவ்வப்போது அபராதம் செலுத்தும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.. அதனால்தான் ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ விதிகளை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம்.

இந்திய ரயில்வேயின் தற்போதைய விதிமுறைகளின்படி, உங்கள் குழந்தைக்கு 5 வயது இன்னும் முழுமை அடையவில்லையானால் அதாவது 4 வயது வரை அவர்கள் ரயிலில் பயணம் செய்ய எந்தவிதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

Train Travel Child ticket rules Railway Ticket Sleeper Coach

ரயில் டிக்கெட் இலவசம்

இவர்களுக்கு டிக்கெட் இல்லாமலேயே இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி உண்டு. இருந்தாலும் ஒரு முக்கியமான விஷயத்தை பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலவசமாக பயணம் செய்யும் குழந்தைகளுக்கு ரயிலில் தனியாக இருக்கை அல்லது பர்த் வசதி ஒதுக்கப்பட மாட்டாது. அவர்கள் தங்கள் பெற்றோருடன் அல்லது பாதுகாவலருடன் அமர்ந்து அல்லது படுத்தே பயணிக்க வேண்டும். ஒருவேளை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்குத் தனியாக ஒரு பெர்த் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்கு பெரியவர்களுக்கு இணையான முழு கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.

ஸ்லீப்பர் கோச்

இந்த வயது பிரிவினருக்கு டிக்கெட் எடுப்பதில் 2 விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 5 வயது பூர்த்தியாகி 12 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதி தேவையில்லையென்றால், நீங்கள் பாதி டிக்கெட் எடுத்தால் போதுமானது. அதாவது, பெரியவர்களுக்கான மொத்த டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும். ஆனால், இந்த சலுகை விலையில் டிக்கெட் எடுக்கும்போது குழந்தைக்குத் தனியாகச் சீட் வழங்கப்பட மாட்டாது.

மாறாக, 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்குத் தனி இருக்கை அல்லது படுக்கை வசதி வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்காக முழு தொகையையும் செலுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு தனியாக ஒரு பெர்த் ஒதுக்கப்படும். நீண்ட தூரப் பயணங்களின் போது குழந்தைகளின் வசதிக்காகப் பலரும் முழு டிக்கெட் எடுப்பதையே விரும்புகிறார்கள்.

டபுள் ஆப்ஷன் சர்ப்ரைஸ்

உங்கள் குழந்தைக்கு 12 வயது பூர்த்தியாகிவிட்டதென்றால் அவர்கள் பெரியவர்களாகவே கருதப்படுவார்கள். 12 வயதுக்கு மேல் உள்ள யாவருக்கும் ரயில் பயணத்தில் கட்டணச் சலுகைகள் கிடையாது. அவர்களுக்கு முழுத் தொகையையும் செலுத்தி முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது கட்டாயமாகும்...

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தையை டிக்கெட் எடுக்காமல் அல்லது பாதி டிக்கெட்டில் அழைத்து செல்வது விதிகளுக்கு புறம்பானது. அப்படி பயணம் செய்வது கண்டறியப்பட்டால், ரயில்வே சட்டப்படி அபராதம் விதிக்கப்படும்.

இந்தியன் ரயில்வே

ஐஆர்சிடிசி வெப்சைட், அல்லது செல்போன் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, குழந்தையின் வயதை துல்லியமாகக் குறிப்பிட வேண்டும். 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் புக் செய்யும்போது, "Child (No Seat/Berth)" அல்லது "Child (Berth/Seat Required)" போன்ற டபுள் ஆப்ஷன்களில் ஒன்றை டிக் செய்வது அவசியம். தவறுதலாக தப்பானை ஆப்ஷனை தேர்வு செய்வது பயணத்தின் போது சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

டெல்லியில் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் குறித்து வெளியான அதிர்ச்சி அறிக்கைகளுக்கு மத்தியில், உங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணிக்கும்போது முறையான டிக்கெட்டுகளைப் பெற்று, பாதுகாப்பாக பயணிப்பது மிக முக்கியமான விஷயமாகும்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+