Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அள்ளி எடுங்க".. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரேசன் கடையின் நேரம் மாறுகிறது.. இனி நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களின் நன்மையை கருத்தில் கொண்டு, ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பலன்பெற்று வருகிறார்கள்..

Happy news for Tamil Nadu Ration Card Holders and Ration Shops Timing Has changed by TN Government

அதேபோல, ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் கடத்தல்களை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்கும் தமிழக அரசு, தற்போது, அடுத்த பிரச்சனையை களைய நடவடிக்கை எடுத்து வருகிறது.

வழக்கமாக, ரேஷன் கடைகளில் உள்ள பெரிய பிரச்சனை, நேரத்திற்கு முன்பே ரேஷன் கடைகளை பணியாளர்கள் மூடிவிட்டு சென்றுவிடுகிறார்களாம்..

முறைகேடு: இதனால், மதிய இடைவேளையில் சரியான நேரத்தில் திறப்பது இல்லையாம்.. அதனால்தான், பணியாளர்கள் உரிய நேரத்தில் நியாய விலை கடைகளை திறக்க வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவிட்டுள்ளது. ஆனாலுட்ம, சில ரேஷன் கடைகள் அரசின் உத்திரவை கடைபிடிக்காமல் இருக்கிறார்களாம்.

மக்களிடம் இதுகுறித்து புகார்கள் வந்த கொண்டே இருப்பதனால் மேலும் பல்வேறு அதிரடி உத்தரவுகளை கூட்டுறவுத்துறை அமல்படுத்த உள்ளது. தற்போது ரேஷன் கடைகள், சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல், 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரையும் செயல்படுகின்றன.. ஆனால், மற்ற மாவட்டங்களில் காலை, 9:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரையும்; பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையும் செயல்படுகின்றன..

கார்டுதாரர்கள்: இதில், சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மறுபடியும் திறப்பதற்கு, 2:30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது.. இந்த நேரத்தில்தான், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயரதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.

அதனால்தான், ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட வேண்டும். மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

வார்னிங்: அதேபோல, பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும். இதனை கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த அதிரடி: இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது.. அரிசி கடத்தலில் பிடிபடும்பட்சத்தில் நடத்தப்படும் விசாரணையில், அதில் ரேஷன் ஊழியருக்கு தொடர்பு இருப்பது உறுதியானால், அவர்கள் மீது இடமாறுதல், அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைக்கு பதில், நிரந்தர பணிநீக்கம் செய்யலாமா? என்றும் கூட்டுறவுத்துறை சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+