"அள்ளி எடுங்க".. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரேசன் கடையின் நேரம் மாறுகிறது.. இனி நிம்மதி
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களின் நன்மையை கருத்தில் கொண்டு, ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பலன்பெற்று வருகிறார்கள்..

அதேபோல, ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் கடத்தல்களை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்கும் தமிழக அரசு, தற்போது, அடுத்த பிரச்சனையை களைய நடவடிக்கை எடுத்து வருகிறது.
வழக்கமாக, ரேஷன் கடைகளில் உள்ள பெரிய பிரச்சனை, நேரத்திற்கு முன்பே ரேஷன் கடைகளை பணியாளர்கள் மூடிவிட்டு சென்றுவிடுகிறார்களாம்..
முறைகேடு: இதனால், மதிய இடைவேளையில் சரியான நேரத்தில் திறப்பது இல்லையாம்.. அதனால்தான், பணியாளர்கள் உரிய நேரத்தில் நியாய விலை கடைகளை திறக்க வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவிட்டுள்ளது. ஆனாலுட்ம, சில ரேஷன் கடைகள் அரசின் உத்திரவை கடைபிடிக்காமல் இருக்கிறார்களாம்.
மக்களிடம் இதுகுறித்து புகார்கள் வந்த கொண்டே இருப்பதனால் மேலும் பல்வேறு அதிரடி உத்தரவுகளை கூட்டுறவுத்துறை அமல்படுத்த உள்ளது. தற்போது ரேஷன் கடைகள், சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல், 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரையும் செயல்படுகின்றன.. ஆனால், மற்ற மாவட்டங்களில் காலை, 9:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரையும்; பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையும் செயல்படுகின்றன..
கார்டுதாரர்கள்: இதில், சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மறுபடியும் திறப்பதற்கு, 2:30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது.. இந்த நேரத்தில்தான், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயரதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.
அதனால்தான், ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட வேண்டும். மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வார்னிங்: அதேபோல, பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும். இதனை கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த அதிரடி: இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது.. அரிசி கடத்தலில் பிடிபடும்பட்சத்தில் நடத்தப்படும் விசாரணையில், அதில் ரேஷன் ஊழியருக்கு தொடர்பு இருப்பது உறுதியானால், அவர்கள் மீது இடமாறுதல், அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைக்கு பதில், நிரந்தர பணிநீக்கம் செய்யலாமா? என்றும் கூட்டுறவுத்துறை சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.
-
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications