"யூட்யூபர் முக்தார்.. பனை மரத்தின் பாளையை சீவ அரிவாள் எடுக்குறவங்க நாங்க.." ஹரி நாடார் பேச்சு
சென்னை: "பாத்துகிட்டு சும்மா இருக்கக்கூடிய பரம்பரையில நாங்க பிறக்கல" என்று ஆவேசமாக யூடியூபர் முக்தாரை கண்டித்து பேசியுள்ளார் ஹரி நாடார்.
யூடியூபர் முக்தார், முன்னாள் முதல்வரான காமராஜர் மற்றும் நாடார் சமூகம் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து நாடார் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் ஹரி நாடார் பேசுகையில், காமராஜர் ஐயா பிறப்பதற்கு முன்னரே நாடார் சமுதாயம் தொழில் மற்றும் கல்வியில் முன்னேறிய சமூகம். காமராஜர் வந்துதான் சலுகை கொடுத்ததாக முக்தார் கூறியிருப்பது சரியல்ல. பெருந்தலைவர் காமராஜர் காலத்துக்கு முன்பே நாடார்களுக்கு வங்கிகள் இருந்தன; பத்திரிகை துறையில் சிறந்து விளங்கினர்.

நாடார் சமுதாயம் பள்ளிகளையும் கல்லூரிகளையும் கட்டி அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் கல்வி பயில வழி வகுத்தது. அப்படிப்பட்ட சமுதாயத்தை முக்தார் கேவலமாக பேசியிருக்கிறார். இதனை சும்மா பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்
பனை மரத்தில் பாளை சீவ அரிவாள் எடுக்கும் வீர பரம்பரை எங்கள் பரம்பரை. அதே நேரத்தில் காமராஜர் கொடுத்த கல்வியை படித்து சட்டத்தை மதித்து முறையாக காவல் துறைக்கு மனு கொடுத்துள்ளோம்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பிரைவேட் கம்ப்ளைன்ட் தாக்கல் செய்திருக்கிறேன். முக்தாரின் முறையற்ற பேச்சுக்காக, காமராஜரின் மீது பாசம் உள்ள நாடார் சமுதாயம் மட்டுமல்லாமல் பல அமைப்புகள் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு முக்தாரை கைது செய்யாமல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. முக்தாரை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் எதற்கும் தயங்க மாட்டோம் என்று பேசினார் ஹரி நாடார்.
மேலும், "மூளையற்ற முக்தாரே மன்னிப்பு கேள்" என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதனிடையே பல முனைகளில் இருந்தும் வந்த எதிர்ப்பு அதிகரிப்பு காரணமாக, யூட்யூப்பர் முக்தார், தனது பேச்சுக்கு இன்று, மன்னிப்பு கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications