பண மோசடி வழக்கு.. பெங்களூர் சிறையில் இருக்கும் ஹரி நாடார் மீண்டும் கைது.. தமிழக போலீசார் நடவடிக்கை!
பண மோசடி வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஹரி நாடார் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: பண மோசடி வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஹரி நாடார் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளா தொழிலதிபர் ஒருவர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் 22 மாதங்களுக்கு பின் தமிழக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குலம் அருகே உள்ள மேல இலந்தைக் குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹரி நாடார்.
காதில் ஒரு புளுடூத் ஹெட்செட்டும் நீண்ட தலைமுடியுடன் வலம் வரும் ஹரி நாடார் நடமாடும் நகைக்கடை போலவே இருப்பார். கழுத்தில் விதவிதமான நகைகளை அணிந்தபடி தென்படும் ஹரி நாடார் பனங்காட்டுப்படை என்ற அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

பனங்காட்டுப் படை கட்சி
கடந்த 2019 ஆம் ஆண்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற போது ஹரி நாடார் அங்கு பனங்காட்டுப் படை கட்சி சார்பாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஹரி நாடார் மூன்றாம் இடம் பிடித்தது கவனம் பெறும் வகையில் அமைந்தது. அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருந்தாலும் சுமார் 37 ஆயிரம் வாக்குகள் பெற்று கவனம் பெற்றார்.

ஹரி நாடார் கைது
ஹரி நாடார் மீது பல்வேறு மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலும் ஹரி நாடார் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கட்ராமன் என்பவரிடம் கடன் பெற்று தருவதாகக் கூறி ரூ. 7 கோடி கடன் கமிஷன் பெற்று மோசடி செய்த வழக்கில் கர்நாடக போலீசாரால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஹரி நாடார் கைது செய்யப்பட்டார்.

ரூ. 1.5 கோடி மோசடி செய்ததாக..
தற்போது பெங்களூரு பரப்பன அஹ்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஹரி நாடார் மீது மேலும் ஒரு வழக்கில் சென்னை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் பஷீர் மற்றும் குஜராத்தை சேர்ந்த இஸ்மாயில் சக்ராத் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் இன்று ஹரி நாடாரை கைது செய்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ. 1.5 கோடி மோசடி செய்ததாகவும் அந்த பணத்தை மீட்டுத்தருமாறும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து இருந்தனர்.

சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை
இந்த புகாரின் அடிப்படையில் ஹரி நாடாருக்கு எதிராக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஏற்கனவே மோசடி புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஹரி நாடாரை சென்னைக்கு அழைத்து வரும் பணியிலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications