கோடீஸ்வரரை பிச்சைக்காரர் ஆக்கினேனா? என்னை மிகவும் பாதித்து விட்டது.. வேதனையுடன் பேசிய செல்லூர் ராஜூ
சென்னை: என் பொதுவாழ்க்கையை களங்கம் விளைவிக்கும் அளவிற்கு ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. என்னுடைய உள்ளத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேதனையுடன் பேசியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் ஊழல் காரணமாக 100 பேருக்கும் மேல் பணிபுரிந்து வந்த தனது ஐடி நிறுவனத்தையே மூடி தற்போது வீடு இன்றி பிளாட்பார்முக்கு வந்துவிட்டதாக தொழிலதிபர் வேதனை தெரிவித்து முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து உள்ளார். கடந்த சில நாட்களாக இந்த தொழில் அதிபர் குறித்த செய்திகள் இணையத்திலும் செய்தி ஊடகங்களிலும் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், தான் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் என்று தொழில் அதிபர் குறிப்பிட்டதால் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை தொடர்பு படுத்தி செய்திகள் வெளியான சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த செல்லூர் ராஜூ கூறியிருப்பதாவது:- முழுக்க முழுக்க இது என்னுடைய தனிப்பட்ட உரிமையை பாதிக்கிற.. தனிப்பட்ட வாழ்க்கையை களங்கம் விளைவிக்கின்ற ஒரு நிகழ்வு ஊடகத்திலும் பத்திரிக்கையிலும் வந்திருக்கிறது.
அதுவும் சட்டமன்ற கூட்டம் தொடங்குகின்ற அன்றைக்கு வந்திருக்கிறது. வேண்டும் என்றே பத்திரிகையில் அதனை போட்டு இருக்கிறார்கள். நான் ஒரு தமிழரை, அமெரிக்க வாழ் கோடீஸ்வரரை தெருவுக்கு கொண்டு வந்த மாதிரி போட்டுள்ளனர். 40 ஆண்டு கால என் பொது வாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கின்ற வகையில், நேர்மையை கெடுக்கிற மாதிரி, தான் ஆத்மார்த்தமாக பணியாற்றிய அந்த நிகழ்வை எல்லாம் கொச்சைப்படுத்துகிற மாதிரி..
என் பொதுவாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கின்ற அளவிற்கு ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. என்னுடைய உள்ளத்தையும் மிகப்பெரிய அளவில் இது பாதித்தது. என் குடும்பத்தையும் பாதித்தது. எனது கழக செயலாளரே நீங்கள் இதற்கு உடனே பதில் கொடுங்க என்று கேட்கக்கூடிய அளவில் அந்த செய்தியின் வலிமை இருந்தது. பொதுவாக கூட்டுறவு தொழிலில் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்திருக்கிறேன் என்றால் என்னுடைய நேர்மையையும் வலிமையையும் வேரு ஒருவர் சொல்லி தெரிய வேண்டியது இல்லை..
பொதுவாக கூட்டுறவு துறையில் எது கொள்முதல் செய்வதாக இருந்தாலும் அதிகாரிகள் அடங்கிய குழு தான் டெண்டர் கமிட்டியில் இருப்பார்கள். இவர்கள் தான் விதிகளின் படி தரம் அறிந்து கொள்வார்கள். அதன் அடிப்படையில் துறை அமைச்சர்கள் எந்த விதமான பதிலுக்கும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள் அந்த தரத்தின் அடிப்படையில் தான் அவர்கள் அந்த பொருளை கொள்முதல் செய்வது தான் வழக்கம். அந்த கமிட்டியின் வழக்கம் அதுதான். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications