சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர்
சென்னை: சென்னையே உறைந்துபோய் கிடக்கிறது இந்த கொடூரத்தை கேட்டு! பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் கடந்த 5ம் தேதி காலை, கேட்பாரற்றுக் கிடந்த அந்த நீல நிற சூட்கேஸை திறந்து பார்த்தபோது மொத்த பேரும் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.. இதுகுறித்த விசாரணையை போலீசார் தீவிரமாக விசாரித்த நிலையில், 3 நாட்கள் கழித்து அதில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது?
5ம் தேதி, பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷனை சுற்றிலும் மரண துர்நாற்றம் வீசியது.. சந்தேகப்பட்டு போலீசார் அதைத் திறந்தபோது மொத்த இடமுமே அதிர்ச்சியில் உறைந்தது.

சென்னை பெரம்பூர் கொலை
காரணம், கை இல்லை, கால் இல்லை, ஏன்... தலையே இல்லாத ஒரு ஆணின் அழுகிய உடல் கிடந்தது.. துண்டு துண்டாக வெட்டப்பட்டு, ஏதோ ஒரு பிரபல மருத்துவமனையின் கழிவு கவரில் சுற்றிக் கிடந்த அந்த சடலம் யார்? கொலையாளி யார்? சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் களம் இறங்கியும், சிசிடிவி காட்சிகள் இல்லாததால் ஆரம்பத்தில் மர்மம் நீடித்தது.
ஆனால், கொலையாளிகள் செய்த ஒரு சின்ன தவறு, போலீசாருக்கு மிகப்பெரிய துப்பாக மாறியதுதான் இந்த வழக்கில் உச்சக்கட்ட திருப்பமாக இப்போது மாறியிருக்கிறது. அந்த மொண்டை கவாத்து சடலத்தின் உடலில் இருந்த ஒரு சிறிய டிரவுசர்... அதில் இருந்த பிராண்டட் பார்கோடுதான் போலீசாருக்கு கிடைத்த மிகப்பெரிய க்ளூ.
சென்னை போலீசுக்கு கிடைத்த க்ளூ
சல்லடை போட்டு சலித்த போலீசார், அது பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெரு ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் கடையில் வாங்கப்பட்ட துணி என்பதைக் கண்டுபிடித்தார்கள். போன வருடம் ஆகஸ்ட் மாதம் அந்த துணியை வாங்கிய 2 பேரின் செல்போன் நம்பர்களை, கடையின் பில் மூலம் எடுத்தனர்.. அந்த நம்பருக்கு போன் செய்தால் ஒரு நம்பர் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
அந்த நம்பரின் கால் ரெக்கார்டுகளைத் தோண்டியபோதுதான், ஒரு பெண் அவரிடம் மணிக்கணக்கில் பேசிய அதிர்ச்சி உண்மை வெளிவந்தது. அந்த பெண்ணின் வாட்ஸ்அப் லொகேஷனைப் பின்தொடர்ந்த தனிப்படை, சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனை பகுதிக்கு விரைந்தது. அங்கே புற்றுநோயாளிகளுக்கு வீடு பிடித்துக் கொடுக்கும் ஏஜென்டாக இருந்த அந்தப் பெண்ணை, ஒரு நோயாளி மூலமாகவே நாடகமாடி வரவழைத்து, சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
கள்ளக்காதலன் போட்ட ஸ்கெட்ச்
கைதான பெண் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோகிமா என்பவராவார்.. வெட்டப்பட்டுக் கிடந்த சடலம், அவரது 2வது கணவர் அமீர் அலி என்பது தெரியவந்தது. ரோகிமாவுக்கு அசாம் மாநிலத்தில் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து விட்டு ரோகிமா, அமீர்அலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாராம்.
சென்னை தாமஸ் ரோடு ஹவுசிங் போர்டில் தங்கியிருந்த அமீர் அலிக்கு, பல பெண்களுடன் தவறான தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.. இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், ரோகிமாவுக்கு தி.நகரில் காய்கறி கடை நடத்தி வந்த அசாம் இளைஞர் அஷ்ரப்புடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்
"உன் கணவனைத் தீர்த்துக்கட்டிவிட்டு நாம் ஒன்றாக வாழலாம்" என கள்ளக்காதலன் ஸ்கெட்ச் போட்டு தந்தாராம்.. கடந்த 3ம் தேதி இரவு அமீர் அலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து, அவர் மயங்கியதும், கண் இமைக்கும் நேரத்தில் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொடூரமாக 2 பேரும் கொலை செய்துள்ளனர்.
அத்துடன் நிற்கவில்லை இந்த கொடூரம். உடலைத் துண்டு துண்டாக வெட்டி, கை கால்களை ஒரு பையிலும், உடலை சூட்கேஸிலும் அடைத்துள்ளனர். வீடு முழுவதும் துர்நாற்றம் வராமல் இருக்க, ஒரு நாள் முழுக்க வாசனை திரவியங்களை தெளித்துவிட்டு, 5ம் தேதி அதிகாலை ரேபிடோ ஆட்டோவில் வந்து உடலை பெரம்பூர் ரயில் நிலையத்தில் வீசியுள்ளனர்.
கை, கால்கள் அடங்கிய பையை ஓடும் ரயிலில் வீசிவிட்டு, தலையை மட்டும் செங்கல்பட்டு பகுதியில் கொண்டு போய் ரகசியமாக புதைத்துள்ளனர். ஒரு சிறிய பார்கோடு கொடுத்த துப்பில், சென்னை போலீசார் இந்த கள்ளக்காதல் கொலைக் கொடூரத்தை அக்குவேறு ஆணிவேறாக உடைத்துள்ளனர். தற்போது செங்கல்பட்டில் புதைக்கப்பட்ட தலையைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications