குழந்தையின் பாலினத்தை அறிவித்த இர்பான்.. நுங்கம்பாக்கம் வீட்டில் சுகாதாரத் துறை நேரில் விசாரணை
சென்னை: தனது குழந்தையின் பாலினத்தை வெளியிட்டதாக வீடியோ வைரலான நிலையில் யூடியூபர் இர்பானிடம் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னர் அது ஆணா, பெண்ணா என்ற விவரத்தை வெளியிடுவது சட்டவிரோதம். இது போன்ற அறிவிப்பை எந்த வகையிலும் மருத்துவரோ, ஸ்கேன் செய்யும் டாக்டர்களோ, அறிவிக்கக் கூடாது என்பதுதான் சட்டம்.

இவ்வாறு அறிவித்தால் டாக்டர், குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்கள் மீது அபராதத்துடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஒவ்வொரு மகப்பேறு மருத்துவமனைகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் யூடியூபர் இர்பான், தனது மனைவியின் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வெளிநாட்டில் சோதனை செய்து அறிவித்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Gender reveal party என்பதை வைத்து தனக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்பதை மருத்துவ அறிக்கையுடன் இர்பான் வெளியிட்டிருந்தார்.
அண்மையில் கோடை விடுமுறைக்காக இர்பானும் அவருடைய மனைவி ஆலியாவும் துபாய் சென்றிருந்தனர். அங்கு ஒரு மருத்துவமனையில் வைத்து தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்தார். ஸ்கேன் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் பார்ட்டி ஒன்றை வைத்து குழந்தை என்ன என்பதை அறிவித்தார். இதை வீடியோவாகவும் அவருடைய சேனலில் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அது போல் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கும் இர்பானுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த நோட்டீஸுக்கு முன்னதாகவே இர்பான் அந்த வீடியோவை தனது சேனலில் இருந்து நீக்கிவிட்டார்.

இதையடுத்து மன்னிப்பு கோரி வீடியோ வெளியிடுவதாகவும் இர்பான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இர்பானின் வீட்டில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட குழந்தை பாலினம் தொடர்பாக அறிவதை பகிரங்கமாக வெளியிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மருத்துவ குழு யூடியூபர் இர்பான் மன்னிப்பு கோரினாலும் அவருடைய குழந்தை பாலினம் குறித்து பதிவிட்டதற்கு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications