பேச்சை நீக்குவதாக சொன்ன சபாநாயகர் அப்பாவு.. கடும் அப்செட் ஆன வேல்முருகன்.. சட்டசபையில் பரபரப்பு!
சென்னை: சட்டசபையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ இன்று கேள்வி எழுப்பிய போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கூடாது என அறிவுறுத்தினார். இதற்கு வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடர் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருக்கிறார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் பேசுகையில், “எனது பண்ருட்டி தொகுதியில இருக்கும் நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, அமைச்சரை அழைத்துப் போய் காட்டி, அங்கு ஒரு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை வேண்டும், ஒரு கட்டடம் வேண்டும் என்று கேட்டேன். கட்டடத்தை தந்து இப்போது திறக்கும் நிலைமையில் உள்ளது. மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை ஆக்குவதற்கு ஒன்றிய அரசின் அனுமதியைக் கேட்டிருப்பதாக சொன்னீர்கள்.
அதுவரை அங்கு பழமையான சர்க்கரை ஆலை இருப்பதால், தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்படும்போது, விவசாயிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு போகும்போது, 24 மணி நேரமும் அங்கு டாக்டர்களும், நர்ஸ்களும் பணியில் இருப்பது இல்லை. அவர்களை எந்த நேரமும் பணியில் வைத்திருக்கும் வகையில் அரசாணையை போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. அதை செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “வேல்முருகன்.. கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யாதீங்க.. குறிப்பில் இருந்து நீக்குகிறேன்” எனத் தெரிவித்தார். அப்பாவுவின் இந்த நடவடிக்கைக்கு வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சட்டசபையில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து வேல்முருகன் கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுவாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மருத்துவர் தான் இருப்பார்கள். இரவு நேரங்களில் Call on duty முறையில் தான் வருவார்கள். இருந்தாலும் நெய்வேலி தொழிலாளர்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்வோம்.
இன்னும் ஒரு சில நாட்களில் 1,100 புதிய மருத்துவர்களை நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். MRB தேர்வு முடிவடைந்து இப்போது சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. பணி ஆணைகள் வழங்கப்பட்டதும், அந்த மருத்துவமனைக்கு கூடுதல் பணியிடங்கள் உருவாக்கித் தரப்படும்” எனப் பதில் அளித்துள்ளார்.
-
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்! -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications