தொடர்ந்து மிரட்டும் மழை.. 4 மாவட்டங்களில் பொது விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு
சென்னை: நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மேற்கண்ட மாவட்டங்களில் பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் இந்த மாத துவக்கத்தில் சென்னையில் பேய் மழை கொட்டியது. 36 மணி நேரம் ஒரு நொடி கூட கேப் இல்லாமல் செய்த மழையால் சென்னை நகரமே மிதந்தது. இந்த வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை முழுமையாக மீண்டு வர ஒரு வாரத்திற்கும் மேல் ஆனது.

இந்த நிலையில், தற்போது குமரி மற்றும் இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை பெய்ய தொடங்கிய மழை தற்போது வரை விடாமல் பெய்து வருகிறது. குறிப்பாக இதனால், தென் மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
உபரி நீரை நம்பியாறு- கருமேனி ஆற்றில் திருப்பிவிட்டு சோதனையும் நடைபெற்று வருகிறது. அகஸ்தியர் அருவில் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்து கொண்டு விழுகிறது. நெல்லை மாவட்டத்தின் நகர பகுதிகள், திசையன் விளை உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளது. இடைவிடாமல் பெய்யும் இந்த மழை இன்றும் பெய்யும் என்று வானியல் ஆர்வர்லர்கள் கூறி வருகின்றனர்.
தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால் மேற்கூறிய மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மட்டும் இன்றி அரசு அலுவலங்களும் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை இயங்காது. எனினும், அத்தியாவசிய சேவைகளான தீ அணைப்பு துறை, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பால் விநியோகம், குடிநீர் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், போக்குவரத்து, உணவகங்கள், பெட்ரோ பங்குகள் உள்ளிட்டவை வழக்கம் போல செயல்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications