வெளுத்து வாங்கிய மழை.. குளுகுளு பிரதேசமான சென்னை.. ஹேப்பி மூடில் மக்கள்!
Recommended Video
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்துக்கு பலனை அளிக்கக் கூடிய வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தள்ளி போனதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இன்னும் பருவமழைக்கான சாதகமான சூழல் நிலவவில்லை என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே குடிநீர் பிரச்சினை தலைத்தூக்க தொடங்கிவிட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் லேசான மழை பெய்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை சென்னையில் சைதாப்பேட்டை, முகப்பேர், அண்ணாநகர், நெற்குன்றம், நொளம்பூர், கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது.
சுமார் அரை மணி நேரம் நீடித்தது. புறநகர் பகுதிகளிலும் இருட்டிக் கொண்டு வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படவுள்ள நிலையில் மழை பெய்ததால் பொரி, அவல், பழங்கள், தோரண வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளுத்து வாங்கிய மழை.. குளுகுளு பிரதேசமான சென்னை.. ஹேப்பி மூடில் மக்கள்! #chennairains #rain pic.twitter.com/B9Ygsl0vnZ
— Oneindia Tamil (@thatsTamil) October 17, 2018