சென்னை குளிர்ந்தது.. இரவில் பெய்த கன மழையால் மக்கள் ஹேப்பி.. வெப்பம் குறைந்தது
சென்னை: சென்னையில் நேற்று இரவு பரவலாக பல இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. வெப்பத்தில் சிக்கி தவித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவான்மியூர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்றுடன் நேற்று இரவு மழை பெய்தது. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் லேசான காற்றுடன் மழை பெய்தது.
பெரும்பாலான இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.

காட்டாற்று வெள்ளம்
இதேபோல் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கோவை மாவட்டத்தில் பில்லூர் அணை நிரம்பி பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கரையோர பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இருபதடி உயர உயர்மட்ட பாலமும் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கிராம மக்கள் காட்டாற்று வெள்ளத்தை கடக்க ஆபத்தான முறையில் பரிசலில் பயணிக்கின்றனர்.

மகாராஷ்டிரா சாலைகள் முடக்கம்
இதேபோல மகாராஷ்டிராவில் கன மழை பெய்வதால், பெங்களூர்-மும்பை இடையேயான, தேசிய நெடுஞ்சாலை 4ல் சரக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழக லாரி ஓட்டுநர்கள், நான்கு நாட்களாக உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.

லாரி ஓட்டுநர்கள்
தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் பாலங்களுக்கு மேலே தண்ணீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மகாராஷ்டிரா எல்லையிலுள்ள சுங்கச்சாவடியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையில் காத்திருக்கின்றன.

அரசு உதவ கோரிக்கை
உணவுப் பொருட்கள் தீர்ந்து போனதாலும், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமலும் தவிக்கிறார்கள் லாரி ஓட்டுநர்கள். காட்டுப் பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளதால் கடைகளுக்கு சென்று கூட உணவுகளை வாங்க முடியவில்லை என்று லாரி ஓட்டுநர்கள் கூறுகின்றனர். மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications