சென்னையில்.. சூறைக்காற்றுடன் திடீரென கொட்டி தீர்த்த கனமழை.. மகிழ்ச்சியில் மிதந்த மக்கள்!
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களிலும், தர்மபுரி, சேலம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டக்களிலும் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.

இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி வருகிறது. கிண்டி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கே.கே.நகர், ராமபுரம் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதேபோல் வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், புரசைவாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு. மதுரவாயல், வானகரம், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி வருகிறது. இந்த திடீர் மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை கொட்டி வருகிறது. நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 20 மி.மீ மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications