Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. சாலைகளில் வெள்ளப்பெருக்கு.. வாகன ஓட்டிகள் அவதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Recommended Video

    சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. சாலைகளில் வெள்ளப்பெருக்கு.

    தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கடமலைகுண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதேபோல், ஆண்டிபட்டியிலும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

     Heavy rain with squalls in various parts of Tamil Nadu

    போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. வெள்ள நீரால் அடித்து கொண்டு வரப்பட்ட ராட்சச மரங்கள் அணைக்கட்டு மேல் பகுதியில் ஆபத்தான நிலையில் தேங்கி நிற்கிறது.

    மதுரையில் நேற்று மாலை, சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றதால், அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். முக்கிய இடங்களான பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    மதுரை மாநகர் பகுதியில் கன மழை கொட்டித் தீர்த்ததால், ஆரப்பாளையத்தில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியது. ஆபத்தை உணராமல் அவ்வழியே சென்ற தனியார் பேருந்து ஒன்று தண்ணீரில் சிக்கிக் கொண்டது. இதுகுறித்த தகவலின்பேரின் சம்பவ பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறையினர், பேருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், வெளுத்து வாங்கிய கனமழையால் கோவில் வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது. கோவில் யானை பார்வதி, கோயிலில் தேங்கியுள்ள மழைநீரில் தத்தளித்தவாறு சென்றது. கோயில் பணியாளர்கள் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், சூறைக்காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. திடீர் மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கோவையில் காந்திபுரம், உக்கடம், ராமநாதபுரம், சிங்கநல்லூா், பீளமேடு, கணபதி, ரயில் நிலையம், குனியமுத்தூா், சுந்தராபுரம், போத்தனூர், பேரூர், வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியது. தேங்கி நின்ற மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

    தஞ்சாவூர் திருவையாறு வல்லம் திருக்காட்டுப்பள்ளி கல்லணை உள்பட மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது, அப்போது பயங்கர இடி மின்னலுடன் இந்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் குருவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+