காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Recommended Video

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு நல்ல மழை பெய்தது. இடியுடன் கொட்டிய பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது .

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதாக குறிப்பிட்டார்.
வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.அடுத்து வரும் 24 மணி நேரத்திற்குள் வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை இருக்கும் என குறிப்பிட்டார். வட தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் பேசிய பாலச்சந்திரன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யு வாய்ப்புள்ளது என்றார். தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஜுன் 1-ம் தேதி முதல் தற்போது வரை வரை 89 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 24 சதவீதம் குறைவு.
கர்நாடக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வலுவாக பெய்கிறது எனவும் குறிப்பிட்டார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திரிபுவனத்தில் 9 செ.மீ மழையும் ஆரணி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ மழையும் உத்திரமேரூரில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications