நாளை தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. சென்னை வானிலை மையம்
Recommended Video
சென்னை: கோவை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் நாளை கனழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல இடங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டமான நீலகிரியிலும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது.
இந்நிலையில் கோவை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதேபோல் வெப்பச்சலனம் காரணமாக பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருச்சி, நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆயவு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications