பொங்கல் லீவு ஓவர்.. சென்னைக்கு படையெடுக்கும் வாகனங்கள்! விழிபிதுங்கும் விக்கிரவாண்டி! கடும் டிராபிக் ஜாம்
சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. குறிப்பாக விக்கிரவாண்டி, பரனூர் டோல்கேட்டுகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்தபடி செல்வதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
இதேபோல் சிங்கபெருமாள் கோயில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில், நெல்லை பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

பள்ளி, கல்லூரிகள் நாளை திறப்பு
தமிழகத்தில் கடந்த 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று மக்கள் கொண்டாட ஏதுவாக 14 ஆம் தேதியும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன்படி, கடந்த 13 ஆம் தேதியே சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கின்றன. இதனால், சொந்த ஊர் சென்ற மக்கள் இன்று காலை முதலே சென்னை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். கார்களிலும் பேருந்துகளிலும் சென்னைக்கு வரும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சாரை சாரையாக அணி வகுத்து வருகின்றன.
கடும் போக்குவரத்து நெரிசல்
சாலையின் மறுபக்கத்தில் ஒரு சில வாகனங்களே செல்லகூடிய நிலையில், சென்னை மார்க்கத்தில் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் வந்து கொண்டு இருக்கின்றன. சொந்த வாகனங்களில் சென்ற பயணிகள், நாளை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளக்கூடாது என திட்டமிட்டு முன்கூட்டியே தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
ஆனாலும் இன்று காலை முதலே சென்னை நோக்கி வரும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் விக்கிரவாண்டி, பரனூர் டோல்கேட்டுகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சில கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை பார்க்க முடிகிறது. இதேபோன்று சிங்கபெருமாள் கோயில் அருகேயும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம்
இது ஒருபக்கம் என்றால் நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பெரும்பாலான டிக்கெட்டுகளில் ரிசர்வேஷன் செய்யப்பட்டுவிட்டதால், பேருந்துகளில் இடம் கிடைக்காமல் பயணிகள் பரிதவிப்பதையும் காண முடிகிறது.
சிறப்பு பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்பட்டாலும் அதுவுமே முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் கடைசி நேரத்தில் பயணத்தை திட்டமிட்டவர்கள் பேருந்துகளில் இடம் கிடைக்காமல் திண்டாடுவதை பார்க்க முடிகிறது. அதேபோல, ரயில் நிலையங்களில் கடுமையான கூட்டம் காணப்படுகிறது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நிற்க கூட முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் இன்று காலை முதலே பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications