குளம் போல் தேங்கிய சென்னை.. ஆமை போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.. ஆபீஸுக்கு இரு மடங்கு "லேட்"
Recommended Video
சென்னை: ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னையில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு பெய்த மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஒரு நாள் மழைக்கே குளம் போல் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
அதி தீவிர மேகங்கள்.. மேக வெடிப்பு போல் கொட்டிய மழை.. எல்லாம் நடந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
வாகன ஓட்டிகள்
பொதுவாக மழை காலங்களில் டிராபிக் ஜாம் ஏற்படும் என்பதால் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு மக்கள் முன் கூட்டியே புறப்படுவது வழக்கம். ஆனால் நேற்று இரவு குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அலர்ட்டாக இருந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
இதையடுத்து காலை 7 மணிக்கே கிளம்பிவிட்டனர். எனினும் கோயம்பேடு, அண்ணாநகர், நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஊர்ந்து
ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. இதனால் ஆமை போல் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை
போக்குவரத்து நெரிசலால் முக்கிய சாலைகள் முடங்கின. மழை இன்னும் தொடர்வதால் போக்குவரத்து நெரிசலால் இரு மடங்கு தாமதம் அலுவலகங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.