தமிழகத்தில் அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு! விடுமுறை தள்ளி போகிறதா?
சென்னை: தமிழகத்தில் அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி புயலானது வடதமிழகத்தை ஒட்டி ஆந்திராவுக்கு செல்லவிருந்ததால் அன்றைய தினம் மேற்கண்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் 5 அடிக்கு மேல் தேங்கியுள்ளது.
இதனால் இன்று வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதாவது டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பலரது புத்தகங்களும் நோட்டுகளும் மழை வெள்ளத்தில் நனைந்து கந்தலாகிவிட்டது. சிலரது புத்தகங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் நாளை அரையாண்டு தேர்வை அந்த மாணவர்கள் எழுத முடியாத நிலை உள்ளது. இதனால் இன்னும் இரண்டு நாட்களில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நாளை தொடங்கவுள்ள அரையாண்டு தேர்வுகள் வரும் 13 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய தேர்வு அட்டவணை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புக்கான புதிய அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 13 ஆம் தேதி தமிழ்
டிசம்பர் 14 ஆம் தேதி விருப்ப பாடம்
டிசம்பர் 15 ஆம் தேதி ஆங்கிலம்
டிசம்பர் 18 ஆம் தேதி கணிதம்
டிசம்பர் 20 ஆம் தேதி அறிவியல்
டிசம்பர் 21 ஆம் தேதி உடற்கல்வி
டிசம்பர் 22 ஆம் தேதி சமூக அறிவியல்
அது போல் 11, 12 ஆம் வகுப்புகளுக்கும் புதிய தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அந்த வகுப்புகளுக்கு டிசம்பர் 13 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும். தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதால் அரையாண்டு தேர்வு விடுமுறையும் தள்ளி வைக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்த நிலையில் திட்டமிட்டது போல் டிசம்பர் 22 ஆம் தேதி வரை தேர்வுகள் முடிந்து, டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications