"இந்த" பூச்செடியை வளர்த்தால் குழந்தை பாக்கியம் கிடைக்குமா? வாஸ்து சொல்வது என்ன?
சென்னை: பிள்ளை வரம் வேண்டுமானால் எந்த பூவை வீட்டில் வளர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு மகத்துவம் இருக்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட பட்டியலில் எந்த பூக்களுக்குமே எதிர்மறையான பலன் இல்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நன்மை இருக்கிறது.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

செல்வம் பெருகிட எந்தப்பூ வளர்க்கலாம்?
🌷வீட்டில் அல்லிப்பூ செடி வளர்த்தால் செல்வம் பெருகும்.
🌷தாமரைப்பூ - செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்.
🌷நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.
🌷பூவரசம்பூ - உடல் நலம் பெருகும்.
🌷வாடாமல்லி - மரணபயம் நீங்கும்.
🌷மல்லிகை - குடும்ப அமைதி.
🌷செம்பருத்தி - நோயற்ற வாழ்வு கிடைத்து, ஆன்ம பலம் பெருகும்.
🌷அரளிப்பூ - கடன்கள் நீங்கும்.
🌷அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை கிடைக்கும்.
🌷ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருகும்.
🌷ரோஜா பூ - நினைத்தது நடக்கும்.
🌷மரிக்கொழுந்து - குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
🌷சம்பங்கி - இடமாற்றம் கிடைக்கும்.
🌷நந்தியாவட்டை - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
🌷வெள்ளை சங்குப்பூ - சிவப்பூஜைக்கு சிறந்தது.
🌷நீல சங்குப்பூ - விஷ்ணு பூஜைக்கு சிறந்தது.
🌷மனோரஞ்சிதம் - குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
🌷முல்லை பூ - தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்.
🌷நித்திய கல்யாணி பூ - முன்னேற்றம் அதிகாரிக்கும்.
🌷மஞ்சள் அரளி பூ - குருவின் அருள், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும். கடன்கள், கிரக பீடை போன்றவை நீங்கும்.
🌷பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும்.
🌷🌷🌷இதன் மூலம் தேவர்கள், ரிஷிகள் அருளும், ஆசியும் கிடைக்கும். இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
பூச்செடிகளை வளர்த்தால் குழந்தை பாக்கியம் கிடைத்துவிடுமா, நோய் நொடி இல்லாமல் வாழ்ந்துவிடுமா என கேட்போரும் உண்டு. இதெல்லாம் அவரவர் நம்பிக்கைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். வாஸ்து அமைப்பு என்பதில் உழைப்பும் , விடாமுயற்சியும் வேண்டும். எனவே எது கிடைக்க வேண்டும், அதற்கான நம்பிக்கையுடனான முயற்சிகளையும் சிகிச்சைகளையும் உழைப்பையும் செய்ய வேண்டும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications