சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு போலீஸ் பாதுகாப்பு வேணுமா? பாஜக வெங்கடேஷ் மனுவை நிராகரித்த ஐகோர்ட்!
சென்னை: பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் போலீஸ் பாதுகாப்பு கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளிக்கெல்லாம் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் தொழிலதிபராக இருக்கிறார். இவர் மீது செம்மரக் கடத்தல் உள்ளிட்ட 59 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், தனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வெங்கடேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், "நான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். கல்வி சார்ந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். என்னுடைய உறவினர் ஒருவரை முத்துசரவணன் என்பவர் படுகொலை செய்தார். இந்த வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு முத்துசரவணன் காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த என்கவுண்டருக்கு தான்தான் காரணம் என சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரவியுள்ளன. இதனால், எனக்கு கொலை மிரட்டல் வருவதால், எனக்கும் தன் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வெங்கடேஷ் செம்மரக் கடத்தல், துப்பாக்கி வைத்து கட்டப் பஞ்சாயத்து செய்வது என பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர், வெங்கடேஷ் சரித்திர பதிவேடு குற்றவாளி என அரசு வழக்கறிஞர் வாதங்களை வைத்தார்.
வெங்கடேஷ் மீது 10 குற்ற வழக்குகள், ஆந்திராவில் 49 வழக்குகள் உள்ளன. இவரது பெயரில் குற்றங்களுக்கான சரித்திர பதிவேடு உள்ளது. பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு முடியாது என கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வெங்கடேஷ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இதேபோல் குற்றவாளிகள் பலரும் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் சூழல் உருவாகும். அது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த குற்றப் பின்னணியும் இல்லாமல் பாதுகாப்பு கேட்டிருந்தால், எந்த வித தயக்கமும் இன்றி பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருப்பேன். சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்த நீதிபதி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications