ஓசூர் அருகே விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க இடைக்கால தடை.. ஹைகோர்ட்
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சேவகாணபள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க தடைவிதிக்க கோரிய வழக்கில் தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வெங்கட ரெட்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில் "தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு துணை மின் நிலையம் அமைப்பதற்காக சேவகாணபள்ளி கிராம விவசாய நிலங்கள் மீது உயர் கோபுரம் அமைத்து உயர் மின் அழுத்த கம்பியை தனியார் தொழிற்சாலைக்கு எடுத்து செல்வதால் தங்களின் விவசாய நிலங்கள் சேதமாகுவது மட்டுமல்லாமல் விவசாயம் பாதிப்புக்குள்ளாகி விலை நிலங்களுக்கு சந்தை விலை மதிப்பு இழந்து பெரும் பொருள் நஷ்டம் ஏற்படும்.

ஏற்கனவே தமிழகத்தில் விவசாய நிலங்களின் பரப்பளவும் விளைச்சல் அளவும் குறைந்துகொண்டே வரும் சூழலில் இப்படி உயர் மின் கோபுரம் அமைப்பதால் விவசாயிகளை பாதிப்புள்ளாக்கும் என்றும் எனவே விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க தடைவிதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்
இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் பரந்தாமன் வாதிடுகையில் தற்போது அரசு தீர்மானித்து இருக்கும் வழித்தடம் குறிப்பிட்ட இலக்கை அடைய சுமார் 10 கி மீ தூரம் மின் கம்பியை எடுத்துச் செல்வதால் விவசாய நிலங்கள் பெரும் அளவில் பாதிக்கப்படும் அரசுக்கு மிகப்பெரிய பொருள் செலவாகும்.
எனவே கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனுதாரர்கள் அளித்துள்ள மாற்று வழித்தட திட்ட முன் மொழிவை செயல் படுத்துவதின் மூலம் அரசு நினைக்கும் இடத்திற்கு வெறும் 3 கி மீ தூரத்தில் உயர் மின் கம்பியை எடுத்துச்சென்றுவிடலாம். இதன் மூலம் மிக சொற்ப விவசாய நிலங்களே பாதிப்புக்குள்ளாகும் அரசிற்கு குறைந்த பொருள் செலவே ஏற்படும். எனவே மாற்று பாதை திட்டத்தை அமல் படுத்தகோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என பரந்தாமன் வாதிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது மனுதாரர் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள மாற்று வழி பாதை முன்மொழிவு குறித்து அரசிடம் உரிய கருத்து பெறும்படியும் அதுவரை மனுதாரர்கள் விவசாய நிலங்களில் மின் அழுத்த உயர் கோபுரம் அமைக்கக்கூடாதெனவும் தற்போது உள்ள நிலையே தொடரவேண்டும் உத்தரவிட்டு வழக்கை வரும் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications