கல்லூரி கல்வி இயக்குநருக்கு பிடிவாரண்ட்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாததால் ஐகோர்ட் அதிரடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கல்லூரி கல்வி இயக்குநருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை ஐகோர்ட். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத கல்லூரி கல்வி இயக்குநருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இயற்பியல் துறை விரிவுரையாளர் பத்மஜா நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட்டும் அமல்படுத்தாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவை கடந்த 3 ஆண்டுகளாக அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும் என சென்னை ஐகோர்ட் கண்டித்தது.

மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத கல்லூரி கல்வி இயக்குநரை நவம்பர் 21 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications