Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசரடித்த ஸ்டாலின்.. கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு காலையிலேயே பறந்த உத்தரவு.. தமிழக அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மக்களிடம் காவல்துறை எந்நேரமும் நெருங்கியே இருக்க வேண்டும் என்பதற்காகவும், பொதுமக்களின் குறைகள் விரைந்து தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.

பொதுமக்கள் தங்களது குறைகளையோ, அல்லது புகார்களையோ போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரிகளை சந்தித்து மனுக்களாக தந்து வருவது வழக்கமாகும்.

High police officers ordered to meet the public in the morning says tn government

விசாரணை: எனினும், தங்கள் புகார்கள் மீது சரியான விசாரணை செய்யப்படுவதில்லை என்ற குறை பொதுமக்களுக்கு இருந்து வருகிறது.. மேலும், பல வழக்குகள் சரியாக விசாரணை செய்யப்படாமலேயே உள்ளது.. அத்துடன், மனுக்கள் நிராகரிப்பு செய்யப்படுவதாகவும் பொதுமக்களின் தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன..

அதுவும் இல்லாமல், பெயரளவில் காவல் நிலையங்களில் ஒரு நாள் பொதுமக்களை காவல்துறை உயரதிகாரிகள் சந்திக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது..

அரசாணை: இப்படிப்பட்ட சூழலில்தான், பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை கேட்டறியும்வண்ணம், தமிழக அரசின் சார்பில் முக்கிய அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. டிஜிபி சைலேந்திரபாபு முயற்சியின் காரணமாக, வாரத்தில் புதன்கிழமை ஆணையரகங்கள் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட கமிஷனர் மற்றும் எஸ் பி நேரடியாக பொதுமக்களை சந்திக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது..

இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்கவும் வழக்கின் விவரங்களை கூறவும் முடியும். இதற்கு முன்பாக வரை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி அல்லது அவருக்கு மேலுள்ள அதிகாரியை பொதுமக்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருந்து வந்தது இந்த நிலையில் தான் இது தமிழக அரசு காவல்துறை அதிகாரிகள் கண்டிப்பாக பொதுமக்களை சந்திக்க வேண்டும் என்று தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது

உத்தரவு: பொது மக்கள் காவல் உயர்அதிகாரிகளை மிக எளிதில் அணுகும் விதத்திலும், பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் விதத்திலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல ஆணையரகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புதன்கிழமைதோறும் பொது மக்களை சந்திக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை உங்கள் நண்பன் என்ற வழக்கம் நடைமுறையில் இருந்தாலும்கூட, தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவானது, காவல்துறையை பொதுமக்களிடம் மேலும் நெருங்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+