Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3D லேசர் கேமரா.. அல்ட்ரா டெக் சென்சார்கள்.. தேசிய நெடுஞ்சாலையில் களமிறக்கப்படும் அரண்.. இனி கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிநவீன சென்சார்கள் மற்றும் தரவு சேகரிப்பு அமைப்புகளை தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாலை குறைபாடுகளை, அதாவது பள்ளங்கள் மற்றும் விரிசல்களை கண்டறிய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. 23 மாநிலங்களில் 20,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு அதிநவீன சென்சார்கள் மற்றும் தரவு சேகரிப்பு அமைப்புகளைப் பயன்படுத்த NHAI திட்டமிட்டுள்ளது.

automobile NHAI

அதிநவீன சென்சார்கள் மற்றும் தரவு சேகரிப்பு அமைப்பு

இந்த வாகனங்களில் 3D லேசர் அடிப்படையிலான அமைப்பு, குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) மற்றும் பொருட்களின் முடுக்கம் மற்றும் கோண வேகத்தை அளவிடும் மின்னணு சாதனங்கள் போன்ற மேம்பட்ட சென்சார்கள் பொருத்தப்படும். பயணிகளுக்குச் சிறந்த சாலை அனுபவத்தை வழங்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று NHAI தெரிவித்துள்ளது.

சேகரிக்கப்படும் தரவுகள், சாலைகளைப் பராமரித்தல், சொத்து மேலாண்மை, உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முடிவுகளை எடுக்க உதவும். இதன் மூலம் சாலைகளின் தற்போதைய நிலை மற்றும் அவற்றின் பராமரிப்புத் தேவைகள் குறித்த துல்லியமான தகவல்கள் கிடைக்கும்.

3D லேசர் அடிப்படையிலான அமைப்பு

சேகரிக்கப்பட்ட தரவுகள் NHAI-ன் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான 'டேட்டா லேக்' போர்ட்டலில் பதிவேற்றப்படும். அங்கு, NHAI-ன் நிபுணர் குழுவால் அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு, பயனுள்ள தகவல்களாக மாற்றப்படும்," என்று NHAI கூறியது. இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, இந்தத் தரவுகள் எதிர்கால தொழில்நுட்ப நோக்கங்களுக்காகச் சாலை சொத்து மேலாண்மை அமைப்பில் பாதுகாக்கப்படும்.

இருவழிச் சாலைகள் முதல் எட்டு வழிச் சாலைகள் வரையிலான அனைத்து திட்டங்களுக்கும் இந்தத் தரவு சேகரிப்பு மேற்கொள்ளப்படும். சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்குவதற்கு முன்பும், அதன்பிறகு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை தரவுகள் சேகரிக்கப்படும். இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளையும் NHAI வரவேற்றுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாலை குறைபாடுகளை, அதாவது பள்ளங்கள் மற்றும் விரிசல்களை கண்டறிய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது

இருவழிச் சாலைகள் முதல் எட்டு வழிச் சாலைகள்

இதற்கிடையில், மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட விபத்து அறிக்கைகளின் அடிப்படையில் விபத்துகள் அதிகம் நடக்கும் "கருப்புப் புள்ளிகளை" NHAI அடையாளம் கண்டு வருகிறது. இவை உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்கள் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மார்ச் 2025 வரை அடையாளம் காணப்பட்ட 13,795 கருப்புப் புள்ளிகளில், 5,036 இடங்களில் நீண்டகால சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சாலை விபத்துகள் குறித்த தரவுகளைப் பதிவு செய்து நிர்வகிப்பதற்கான மத்திய களஞ்சியமாக e-DAR (மின்னணு விரிவான விபத்து அறிக்கை) திட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் சாலை பள்ளங்கள் உடனடியாக சரி செய்யப்படும், விபத்துகள் அதிகமாக நடக்கும் இடங்கள் கண்காணிக்கப்படும், எதிர்கால விபத்துகள் தடுக்கப்படும், பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் அடியோடு குறைக்கப்படும், முக்கியமாக இரவு நேர கிரைம்கள் தடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+