திருவண்ணாமலையில் ஹிஜாப் அணியத் தடை! திமுக அரசுக்கு அவப்பெயர் உருவாக்க முயற்சி! -மக்கள் ஒற்றுமை மேடை
சென்னை: திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்த மாணவியை தேர்வெழுத விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்று இப்படிச் சில தனியார் பள்ளி நிர்வாகிகள் நடக்க கூடும் என்றும் அவர்களைக் கண்டித்து வைப்பது அரசின் கடமை எனவும் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் தட்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார சபாவின் ஹிந்தி தேர்வுகள் நடந்தன. தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்கத் தடையுள்ளது எனும் ஒன்றிய நிதி அமைச்சரின் பேச்சு பச்சைப் பொய் என்பதை இதன் மூலம் உணரலாம். விரும்புகிறவர்கள் ஹிந்தி படிக்க இங்கு வசதி உள்ளது என்பதே உண்மை.
அப்படி ஹிந்தி படித்து தேர்வு எழுதச் சென்ற பெண்ணை அந்தப் பள்ளி நிர்வாகம் தடுத்த அநியாயம் நடந்துள்ளது. அதற்கான காரணம் அந்த முஸ்லிம் பெண் ஹிஜாப் அணிந்திருந்தார் என்பது. கேள்வித்தாள் பெற்று தேர்வு எழுதிக் கொண்டிருந்த ஷபானா எனும் அந்தப் பெண்ணை ஹிஜாபை கழட்டிவிட்டு வருமாறு தேர்வு கண்காணிப்பாளரும், பள்ளி முதல்வரும் கட்டாயப் படுத்தியிருக்கிறார்கள்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர் தேர்வு எழுதாமல் சென்றிருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. எத்தகைய உடை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பம். இதில் பள்ளி நிர்வாகம் தலையிட எவ்வித உரிமையும் கிடையாது. ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் மதவெறுப்புச் சிந்தனை இந்தப் பள்ளி நிர்வாகத்தின் சிந்தனைக்குள் புகுந்திருக்கிறது. அதன் காரணமாகவே இத்தகைய நடவடிக்கையை அது எடுத்திருக்கிறது. இந்த அடாவடிச் செயலுக்காக அதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேடை வலியுறுத்துகிறது.
வகுப்புகளில் மட்டுமல்லாது தேர்வுகளிலும் ஹிஜாப் அணிவதைத் தடுக்க கூடாது என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு அரசு கறாரான சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்; அதை மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் முஸ்லிம் பெண்களின் கல்வி மோசமாக பாதிக்கப்படும். கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்தபோது என்ன நடந்தது என்பதை அறிவோம். தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்று இப்படிச் சில தனியார் பள்ளி நிர்வாகிகள் நடக்க கூடும். அவர்களைக் கண்டித்து வைப்பது அரசின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது மக்கள் ஒற்றுமை மேடை.''
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications