தப்பு தப்பு.. பெருங்குற்றம் புரிந்த 2 திமுக அமைச்சர்கள்.. ஹைகோர்ட்டுக்கு ஓடும் தலைவர்.. யார் பாருங்க
சென்னை: சனாதன ஒழிப்பு மாநாட்டில், தமிழக அமைச்சர்கள் பங்கேற்றதற்கு கண்டனம் தெரிவித்து, இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கபோவதாகவும், அறிவித்துள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு, விஸ்வரூபம் எடுத்து வருகிறது... "சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்... எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.. எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்" என்று உதயநிதி பேசியிருப்பது தலைநகரை அசைத்து பார்க்க வைத்து வருகிறது.

மத்திய அமைச்சர்: அதனால்தான், மத்திய அமைச்சர் அமித்ஷாவே உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் நிலைக்கு சென்றுள்ளார்.. மற்றொருபக்கம் உதயநிதி மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.. போலீஸ்வரை புகார் சென்றாலும், உதயநிதி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.. இந்த உறுதிப்பாட்டை, மீண்டும் ஒருமுறை நேற்றைய தினம் அழுத்தமாக பதிவிட்டும் இருந்தார்.
அறிக்கை: இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,"சென்னை காமராஜர் அரங்கில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் திராவிடர் கழகம் இணைந்து, மாநாடு மற்றும் கருத்தரங்கத்தை நடத்தியது. தமிழக அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு இருவரும், இதில் பங்கேற்று பேசியுள்ளனர்.
இது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால், 2 பேரின் அமைச்சர் பதவியையும், தமிழக முதல்வர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இது போன்ற மாநாட்டிற்கும், கருத்தரங்கத்திற்கும் போலீசார் அனுமதி வழங்கியதே தவறு. இந்து மதத்தை ஒழிப்போம் என்று சொல்லி, தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் திராவிடர் கழகம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் பங்கேற்றது மனவேதனை அளிக்கிறது.
சனாதன தர்மம்: பெரும்பான்மையான இந்து மக்களின் ஓட்டுக்களை பெற்று, ஆட்சியில் அமர்ந்து கொண்டு, இந்துக்களை ஒழிப்போம், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசிய இவர்களின் செயல், இந்துக்களை வெறுப்பதாக உள்ளது. பெரும்பான்மையான இந்து மக்களின் மனதை புண்படுத்தும் செயலாக உள்ளது.. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய செயலும்கூட.. பெருங்குற்றம்.
எனவே, பங்கேற்ற 2 அமைச்சர்களின் பதவியை, தமிழக முதல்வர் தகுதி நீக்கம்செய்யாவிடில், இந்து மக்கள் கட்சி, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடும். தமிழகம் முழுக்க கண்டன போராட்டமும் நடத்தப்படும்" என்று அறிவித்திருக்கிறார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications